உக்ரைன் போரை மாற்றியுள்ள பயங்கரமான புதிய ஆயுதம் - பல நகரங்களை சிதைக்கும் ரஷ்யா
ரஷ்யாவின் புதிய பயங்கர ஆயுதம் உக்ரைனில் நடக்கும் போரை இன்னும் கோரமாக மாற்றியுள்ளது.
உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ரோடின்ஸ்கே நகரம், ரஷ்யாவின் புதிய தாக்குதல்களின் மையமாக மாறியுள்ளது.
சமீபத்தில் 250 கிலோகிராம் எடையுடைய கிளைடு குண்டு (glide bomb), நகரின் நிர்வாகக் கட்டிடத்தைத் தாக்கி, மூன்று குடியிருப்பு பகுதிகளையும் அழித்தது.
இதனுடன், நகரம் முழுவதும் ட்ரோன் தாக்குதல்களில் சத்தம் முழங்கியது. ரஷ்யா, போக்ரோவ்ஸ்க் நகரத்தை சுற்றிவளைத்து வெல்ல முயற்சி செய்கிறது. இந்த நகரத்திற்கு செல்லும் சாலை வழிகளை துண்டிக்க ரஷ்யா தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இந்த தாக்குதல்களில் புதிய ஆபத்தான ஆயுதமாக 'Fibre optic drones' வெளிப்பட்டுள்ளன. இந்த ட்ரோன்கள், சாதாரண ட்ரோன்களைப்போல் ரேடியோ அலையை பயன்படுத்தாது, பைபர் கேபிள் வழியாக நேரடி கட்டுப்பாட்டை பெற்றுள்ளன. இதனால் அவை எலக்ட்ரானிக் தடையிலிருந்து பாதுகாப்பாக இருக்கின்றன.
உகரைன் வீரர்கள், இந்த ட்ரோன்கள் காரணமாக பாதுகாப்பான இடங்களில் கூட தீவிர கண்காணிப்பு எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.
"நம்மை பார்த்துவிட்டார்களா என்பதை கூட தெரியாமல் இருக்கிறது. பார்த்திருந்தால், அது நம் கடைசி நிமிடமா இருக்கலாம்," என்கிறார் உக்ரேனிய ராணுவ மேல் அதிகாரி ஒருவர்.
போர் முன்னணியில் இருக்கும் வீரர்கள், கடுமையான மன அழுத்தம் மற்றும் இடைவேளையின்றி நீண்ட நேரம் போராடுகிறார்கள்.
இந்த புதிய ட்ரோன் யுக்திகள், போரை மாற்றும் பயங்கர ஆயுதமாக மாற்றியுள்ளன. ஆனால் உகரைன், தொடர்ந்து எதிர்ப்பு அளித்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ukraine Russia fibre optic drones, Rodynske drone attacks, Glide bomb Ukraine, Ukraine frontline soldiers, Russia new war tactics, Ukraine 2025 war news, Pokrovsk front line, Ukrainian infantry trenches, Russian drone technology, Maksym Ukraine soldier story