உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்.., என்னென்ன தெரியுமா?
உயர் இரத்த அழுத்தம் என்பது இரத்த நாளங்களில் அழுத்தம் அதிகமாக (140/90 mmHg அல்லது அதற்கு மேல்) இருப்பது.
உணவில் உள்ள அதிக உப்பு மற்றும் சோடியம் உடலில் நீரைத் தேக்கி, இரத்த அளவை அதிகரித்து அழுத்தத்தை உயர்த்தும்.
எனவே, உணவு லேபிள்களைப் படித்து அவற்றில் எவ்வளவு சோடியம் உள்ளது என்பதைக் அறிந்து தேர்ந்தெடுக்கவும்.

பேக் செய்யப்பட்ட உணவுகளை விட புதிய சிற்றுண்டிகளை எடுத்துக்கொள்ளவும்.
குறிப்பாக, உணவுகளை கடையில் வாங்குவதை தவிர்த்து வீட்டில் சமைத்து உண்பது உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கும்.
அந்தவகையில், உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் உணவுகள் குறித்து பார்க்கலாம்.
என்னென்ன உணவுகள்?
பிரட்- பிரட்டை தினமும் சாப்பிடுவது உங்கள் உணவில் நிறைய சோடியத்தை சேர்க்கக்கூடும். மேலும், தனியா பிரட்களிலும் உப்பு உள்ளது.
சாஸ்- தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ் போன்றவை நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்க அதிக உப்பு சேர்க்கப்படுகிறது.
பொட்டல உணவுகள்- சிப்ஸ், மிக்ஸர்,மற்றும் பேக் செய்யப்பட்ட உணவில் கூட பெரும்பாலும் உப்பு அதிகமாக உள்ளது.
சீஸ்- சீஸ் துண்டுகள் மற்றும் சுவையூட்டப்பட்ட வெண்ணெய் ஆகியவை அதிக உப்புக் கொண்ட உணவுகளாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |