தரம் 5 புலமை பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இலங்கையில் தரம் 5 புலமை பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் இன்று முதல் இணையவழி மூலமாக விண்ணப்பத்தை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
புலமை பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு
இது குறித்து அவர் தெரிவிக்கையில், வருகிற ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.
WWW.ONLINEEXAMS.GOV.LK என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், பரீட்சை திணைக்களத்தின் அவசர இலக்கமான 1911 அல்லது 011-2 784537, 0112 786616, 0112 784208 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொள்ளலாம்.
ஜூன் 14ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பிறகு இணையவழி விண்ணப்பம் நிறுத்தப்படும் எனவும் விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி திகதி நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.
அரச பாடசாலைகள் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளில் தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மாத்திரமே இப்பரீட்சையில் தோன்ற முடியும்.
மேலும் இவ்வருடத்திற்கான தரம் 5 புலமை பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |