வான்வெளியை நாடுகள் மூடுவது எப்படி? விமானங்கள் நுழைந்தால் என்னாகும்?
நாடுகள் வான்வெளியை எவ்வாறு மூடும், மூடப்பட்ட வான்வெளியில் விமானங்கள் நுழைந்தால் என்னாகும் என்பது குறித்து பார்க்கலாம்.
வான்வெளியை மூடிய மத்திய கிழக்கு நாடுகள்
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் நிலையில், அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கிற்கான விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஈரான், இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்கில் உள்ள பெரும்பாலான நாடுகள் தங்கள் வான் எல்லையை மூடுவதாக அறிவித்துள்ளன.
கடந்த ஆண்டு, ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா தனது வான் எல்லையை மூடியது.
மூடிய வான்வெளியில் விமானங்கள் நுழைந்தால்?
ஒரு நாடு போர் மற்றும் அரசியல் சூழல் காரணமாக தங்கள் வான் எல்லையை மூடுவதாக அறிவிக்கும்.
வான் எல்லையை மூடுவதாக ஒரு நாடு அதிகாரபூர்வமாக அறிவிக்கும் போது, அந்த அறிவிப்பு உடனடியாக உலகெங்கிலும் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் விமானிகளுக்கு இந்த தகவல் வழங்கப்படும்.
இதனைத்தொடர்ந்து, சரக்கு மற்றும் பயணிகள் விமானத்தை குறிப்பிட்ட நாட்டு எல்லையை தவிர்த்து மாற்று பாதையில் இயக்குவார்கள். மாற்று பாதையில் இயக்க வாய்ப்பில்லையெனில் விமானத்தை ரத்து செய்வார்கள்.

அதையும் மீறி, விமானம் வான் எல்லை மூடப்பட்ட நாட்டின் வான்வெளிக்குள் அனுமதியின்றி நுழைந்தால், முதலில் அந்த விமானத்தின் விமானியை ரேடியோ அலைவரிசை மூலம் தொடர்பு கொண்டு தவறுதலாக நுழைந்திருந்தால், உடனடியாக மாற்று பாதையில் செல்லுமாறு எச்சரிக்கை விடுப்பார்கள்.
விமானி பதில் அளிக்காமல் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் பயணித்தால், அந்த நாட்டின் விமானப்படை விமானங்கள் உடனடியாக சம்மந்தப்பட்ட விமானத்தை சூழ்ந்து, அருகே உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க கட்டாயப்படுத்தும்.

அதன் பின்னர் விமானியிடம் பாதுகாப்புபடை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொள்வார்கள். விதிமீறலின் அளவைப் பொறுத்து, விமான நிறுவனத்திற்குப் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அந்த நாட்டின் மீது சர்வதேச சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |