அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால்
இந்தியா, அர்மேனியாவுடன் தனது ராணுவ ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
பினாக்கா (Pinaka), ஆகாஷ் ஏவுகணை, ஹோவிட்சர் போன்ற சக்திவாய்ந்த ஆயுதங்களை அர்மேனியாவுக்குப் வழங்கும் முயற்சி, துருக்கி-அசர்பைஜான்-பாகிஸ்தான் கூட்டணியை சமன்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் நட்பு நாட்டிற்கு எதிராக சீனாவின் 24 JF-17 போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான் நட்பு நாடு
2020-ல் நடந்த நாகோர்னோ-கராபாக் போரில், ரஷ்யாவின் ஆதரவு இல்லாமல் இருந்ததால் அர்மேனியா புதிய ஆயுத விற்பனையாளரை தேடியது.
ரஷ்யாவுடன் அந்நாட்டின் உறவு பலவீனமடைந்த நிலையில், இந்தியா முக்கிய ஆயுத விற்பனையாளராக உருவெடுத்துள்ளது.
2022-ல் கையெழுத்தான ஒப்பந்தத்தின் கீழ், ஆகாஷ்–1S ஏவுகணைகளை இந்தியா அர்மேனியாவுக்கு அனுப்பியது.
இந்த ஆண்டில் இரண்டாவது கட்ட ஏவுகணை மற்றும் பினாக்கா மல்டிபிள் ரொக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்கள் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான 'ஆபரேஷன் சிந்து' நிகழ்வின் போது, துருக்கி மற்றும் அசர்பைஜான், பாகிஸ்தானுக்கு ஆதரவளித்து இந்தியாவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து, இந்தியா அர்மேனியாவுக்கு ஆயுதம் வழங்குவதை ஒரு 'Power Balancing' நடவடிக்கையாக கருதப்படுகிறது.
இந்தியாவின் இந்த நடவடிக்கை, வருங்காலத்தில் துருக்கி மற்றும் அசர்பைஜானுடன் உள்ள உறவுகளை மேலும் பதற்றமூட்டும் என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Armenia defence deal, Pinaka and Akash missile sale, India Pakistan Turkey tension, Armenia Turkey Azerbaijan conflict, India arms export 2025, Operation Sindoor aftermath, India Armenia missile delivery, Indian howitzers to Armenia, Armenia Russia defence break, Erdogan Pakistan India relations
You May Like This Video