இந்தியாவில் EV கார்களுக்கு இறக்குமதி வரி அதிரடி குறைப்பு - புதிய நிறுவனங்களை ஈர்க்க திட்டம்
இந்திய அரசு, இலகுவான மின்சார வாகன (EV) உற்பத்தியை ஊக்குவிக்க ‘மின்சார பயணியர் கார்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம்’ (SPMEPCI) என்ற புதிய நெறிமுறையை அறிவித்துள்ளது.
இதன் முக்கிய அம்சமாக, EV கார்களின் இறக்குமதி வரி 110 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகையைப் பெற, கார் நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்சம் ரூ.4,150 கோடி ($500 மில்லியன்) இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்.
ஏற்கனவே உள்ள உற்பத்தி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது, ஆனால் பழைய முதலீடுகள் மற்றும் நிலம்/கட்டிட மதிப்புகள் கணக்கில் கொள்ளப்படாது.
சலுகையின் அம்சங்கள்:
- ஆண்டுக்கு $35,000 (₹30 லட்சம்) மேலான விலையில் உள்ள 8,000 கார்கள் வரை 15% வரியிலேயே இறக்குமதி செய்யலாம்.
- இந்த வரிசலுகை 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.
- அனுபவிக்கக்கூடிய மொத்த நன்மைகள் ரூ.6,484 கோடி அல்லது முதலீடு செய்த தொகையிலிருந்து குறைவானது.
முக்கிய இலக்குகள்:
- 3-வது ஆண்டில் உற்பத்தி அமைப்பை அமைத்திருக்க வேண்டும்.
- 25 சதவீதம் உள்ளூர் மதிப்பு கூட்டத்தை 3-வது ஆண்டுக்குள், 50 சதவீதத்தை ஐந்தாவது ஆண்டுக்குள் அடைய வேண்டும்.
- இரண்டாவது ஆண்டில் ரூ.2,500 கோடி வருவாய், நான்காவது ஆண்டில் ₹5,000 கோடி, 5வது ஆண்டில் ரூ.7,500 கோடி வருமான இலக்குகள் அடைய வேண்டும்.
Hyundai, Kia, Mercedes-Benz, Skoda, Volkswagen போன்ற கம்பெனிகள் திட்டத்தில் ஆர்வம் தெரிவித்துள்ளன.
ஆனால், Tesla உற்பத்தியில் ஈடுபடாமல், இந்தியாவில் சோரூம்கள் மட்டும் துவக்க திட்டம் கொண்டுள்ளதாக அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |