ஈரானில் சிக்கிய இலங்கையர்களை மீட்க இந்தியா நடவடிக்கை
ஈரானில் சிக்கிய இலங்கையர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் சூழ்நிலையில், ஈரானில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்டு கொண்டுவர இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த உதவிக்கு இலங்கை அரசும் நன்றியை தெரிவித்துள்ளது.
"இந்திய அரசின் உடனடி உதவிக்கு இலங்கை அரசாங்கம் தனது உள்ளமார்ந்த நன்றியை தெரிவிக்கிறது. இது இருநாடுகளுக்கிடையிலான உறுதியான தோழமை உறவை பிரதிபலிக்கிறது," என இலங்கை வெளிவிவகார அலுவலகம் 'X'-இல் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நேபாளம் மற்றும் இலங்கையின் கோரிக்கையை ஏற்று, இந்திய தூதரகம் ஈரானில் இருந்து இந்தியர்கள் மட்டுமல்ல, நேபாளம் மற்றும் இலங்கையர்களையும் மீட்டெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
"ஈரானில் உள்ள இலங்கையர்கள் இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு பறக்கும் விமானங்களில் இடம் பெறலாம்" எனவும், இலங்கை வெளிவிவகாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தற்போது 100-க்கும் குறைவான இலங்கையர்கள் ஈரானில் இருப்பது உறுதியாகும். அதே நேரத்தில் 20,000-க்கும் அதிகமான இலங்கையர்கள் இஸ்ரேலில் வேலைபார்த்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கையை அண்டை நாடுகளுக்கும் உதவ தயாரான இந்தியாவின் மனிதாபிமான செயலாக பலரும் பாராட்டியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Sri Lanka Iran evacuation, Sri Lankans stranded in Iran, India helps evacuate Sri Lankans, Iran Israel war Indian support, Indian embassy Iran evacuation, Nepal Sri Lanka Iran crisis, India humanitarian aid Iran, Sri Lanka thanks India, Iran conflict rescue mission, South Asia solidarity evacuation