CIA அதிகாரி போல நடித்து, இந்தோனேஷியா போர்விமான ஒப்பந்தத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி தொழிலதிபர்
இந்தோனேஷியாவில் போர்விமான ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக, இந்திய வம்சாவளி தொழிலதிபர் CIA அதிகாரி போல நடித்தது அம்பலமாகியுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் கவுரவ் ஸ்ரீவஸ்தவா, தன்னை அமெரிக்காவின் CIA அதிகாரி எனக் கூறி, இந்தோனேஷிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி, பல பில்லியன் டொலர் மதிப்புள்ள போர்விமான ஒப்பந்தத்தைப் பெற முயன்றதாக Organized Crime and Corruption Reporting Project (OCCRP) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், ஸ்ரீவாஸ்தவா 2020-2022 காலகட்டத்தில் இந்தோனேஷியா பாதுகாப்புத் துறையுடன் 36 F-15 போர்விமானங்கள், UH-60 Black Hawk ஹெலிகாப்டர்கள், C-130 போக்குவரத்து விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ உபகரணங்களை வாங்கும் நோக்கில் ஒப்பந்தக் கடிதங்களைப் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் காகிதத்தில் மட்டுமே இருந்து, நடைமுறையில் எந்த வாங்குதலும் நடைபெறவில்லை.
மேலும், ஸ்ரீவஸ்தவா உருவாக்கிய நிறுவனங்கள் அனைத்தும் ‘ஷெல்’ நிறுவனங்களாக இருந்ததாகவும், வரி செலுத்தாததால் பின்னர் மூடப்பட்டதாகவும் பதிவுகள் காட்டுகின்றன.
அவரது முன்னாள் வணிக கூட்டாளி நீல்ஸ் ட்ரூஸ்ட், “ஸ்ரீவஸ்தவா CIA அதிகாரி என நம்பி, தனது நிறுவனத்தில் 50 சதவீத பங்குகளை அவருக்கு வழங்கினேன். பின்னர் அவர் 51 மில்லியன் டொலர் கடனை Arsari Group-ற்கு ஏற்பாடு செய்தார்” என வழக்கில் கூறியுள்ளார்.
ஸ்ரீவஸ்தவா, இந்த குற்றச்சாட்டுகளை “முழுமையான பொய்கள்” என மறுத்து, தனது முன்னாள் கூட்டாளி பரப்பிய கற்பனைகள் என விளக்கம் அளித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |