பிரித்தானியாவில் வேலை கிடைக்காத இந்தியருக்கு இழப்பீடு வழங்கிய நிறுவனம்
பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு வழங்கப்படாத இந்தியருக்கு இழப்பீடு வழங்க நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த சபின் ஷாஜி, 2023-ல் Post-Brexit Visa Scheme மூலம் அங்கு பராமரிப்பு பணியாளராக (care worker) சென்றார்.
Swan Care Solutions Ltd என்ற நிறுவனம் அவருக்கு sponsorship certificate வழங்கி வேலை செய்ய உரிமை அளித்தது.
ஆனால், அவர் ஒரு வருடம் முழுவதும் வேலைக்கு தயாராக காத்திருந்தபோதும், அந்த நிறுவனம் ஒரு நாளும் வேலை வழங்கவில்லை.

இதனால், சபின் பொருளாதார சிக்கலில் சிக்கினார். உணவுக்கே வழியின்றி, உணவு வங்கியை சார்ந்திருக்கே வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த ஸ்பான்சர்ஷிப் கிடைப்பதற்காக அவர் ஒரு ஏஜென்டுக்கு 17,000 பவுண்டுகளை கொடுத்துள்ளார்.
Employement Tribunal விசாரணையில், அந்த நிறுவனம் அவரை Zero-Hour Worker என்பது போல நடத்தி, சம்பளம் வழங்கமால் விட்டது தெரியவந்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, Swan Care Solutions நிறுவனம் சபினுக்கு 28,843.54 பவுண்டுகள் சம்பளமும் விடுமுறை தொகையை வழங்கவும், கூடுதலாக 8,700 பவுண்டு செலவுகளையும் ஏற்றுக்கொள்ள உத்தரவிட்டார்.
மேலும், அவருக்கு எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை வழங்கத் தவறியதற்கு தீர்வும் தேவியான உதவிகளையும் செய்து கொடுக்க உத்தரவிடப்பட்டது.
இதேபோல், ஆயிரக்கணக்கான பராமரிப்பு பணியாளர்கள் பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு கனவுடன் வந்து, வேலை இல்லாமல் துன்பத்திற்கு ஆளாவதாக, Work Rights Centre என்ற தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சபின், “நான் வாழ்வதற்கே போராட வேண்டிய நிலை. பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை முற்றிலும் சிதறியது” என்று உணர்ச்சியுடன் கூறினார்.
இந்த வழக்கு, பிரித்தானியாவில் care workers-க்கு வழங்கப்படும் Skilled Worker Visa திட்டத்தில் மாற்றம் தேவை என்பதை வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |