அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு
இஸ்ரேலின் முக்கியமான ஹைஃபா துறைமுகத்தில் இந்தியாவின் அதானி குழுமம் நிர்வகித்துவந்த 4.2 பில்லியன் டொலர் மதிப்பிலான சரக்கு கட்டிடம் ஈரான் ஏவிய ஏவுகணையால் அழிக்கப்பட்டது.
இது உலகளாவிய பங்குச் சந்தைகளிலும், இராஜதந்திர தளங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் “தீவிரமான பொருளாதார போர் நடவடிக்கை” எனக் கூறியுள்ளது.
இந்தியா இந்த தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ளதோடு, ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உலகம் முழுவதும் எழுந்துள்ளன.
அதானிக்கு பில்லியன் கணக்கில் இழப்பு
2022-ஆம் ஆண்டு முதல் அதானி குழுமம் நிர்வகித்து வந்த ஹைஃபா துறைமுகம், இஸ்ரேலின் ஏற்றுமதியின் 30 சதவீதம் வரை கையாளும் முக்கியக் கூடமாக இருந்தது. இது இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் (IMEC) முக்கிய பகுதியும் ஆகும்.
- இந்த திட்டத்தில் அதானி குழுமம் 840 மில்லியன் டொலர் முதலீடு செய்திருந்தது.
- ஆண்டு வருமானத்தில் 100 மில்லியன் டொலர் வரை இழப்புக் காணப்படலாம்.
- பங்குச் சந்தை மதிப்பில் 2 பில்லியன் டொலர் வரை வீழ்ச்சி ஏற்படக்கூடும்.
- இந்த தாக்குதலையடுத்து, அடானி பங்கு 5% வீழ்ச்சி அடைந்துள்ளது.
பாகிஸ்தான் ஆதரவு
ஈரானின் இந்த தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாகிஸ்தான், இது “சட்டப்பூர்வமான தற்காப்பு நடவடிக்கை” எனக் கூறியது. இது ஆச்சரியம் அளித்ததோடு, பல்வேறு நாட்டு வெளியுறவுத் துறை வல்லுநர்களின் கண்டனத்தையும் பெற்றுள்ளது.
சூழ்நிலை மாற்றம் மற்றும் இந்தியாவின் சவால்
- இந்த தாக்குதல் இந்தியாவின் IMEC திட்டத்திற்கு தடையாக இருக்கும்
- கப்பல் காப்பீடு, வர்த்தகச் செலவுகளை உயர்த்தும்
- மத்திய கிழக்கில் புதிய இராஜதந்திர மாற்றங்களை உருவாக்கும்
இந்தியா, இஸ்ரேல் மற்றும் உலக சக்திகளுடன் இணைந்து இந்த சூழ்நிலையை கையாளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Adani Haifa Port Iran attack, Haifa port missile strike, Iran Israel Adani news, Adani Group investment loss, Pakistan supports Iran strike, India IMEC project threat, Global reaction Iran Haifa, Economic warfare Middle East