வான்வெளியை திறந்த ஜோர்டான்! ஈரான் ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கும் தோராயமான நேரம்
இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் நடவடிக்கைக்காக ஜோர்டான் தனது வான்வெளியை திறந்துவிட்டது.
ஈரான்-இஸ்ரேல் பதற்றம்
கடந்த ஏப்ரல் 1ம் திகதி டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் சனிக்கிழமை மாலை (நேற்று) இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது.
இந்த தாக்குதலில், ஈரான் ராணுவம் கிட்டத்தட்ட 200 ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த ராக்கெட்டுகளில் பெரும்பாலானவை இஸ்ரேலிய ஏவுகணை தடுப்பு அமைப்புகளால் (Iron Dome) தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வான்வெளியை திறந்த ஜோர்டான்
தாக்குதலின் போது, ஜோர்டான் தனது வான்வெளியை இஸ்ரேலிய F-16 போர் விமானங்களுக்கு திறந்து விட்டுள்ளது.
இதன் மூலம், ஈரானிய ஆளில்லா விமானங்களை சிரியா மற்றும் ஜோர்டான் மீது இடைமறிக்க இஸ்ரேலுக்கு வாய்ப்பு கிடைத்தது என்று இஸ்ரேல் சேனல் 12 செய்தி தெரிவித்துள்ளது.
❗️ The targets of Iran's strikes on Israel will be only military facilities
— NEXTA (@nexta_tv) April 13, 2024
ABC channel made such a statement, citing a source.
As the channel notes, the first drones will approach Israel an hour earlier than expected.
Between Iran and Israel - 1000km in a straight line from… pic.twitter.com/XMNyJ6QiIh
ஈரானின் தாக்குதல்கள் முழுக்க முழுக்க இராணுவ இலக்குகளை மட்டுமே குறி வைத்ததாகவும், 1000 கி.மீ தூரத்திற்குள் இருந்து நேர்கோட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு ஏவுகணை தாக்குதலின் தோராயமான நேரம்:
- பாலிஸ்டிக் ஏவுகணை: 12 நிமிடங்கள்
- குரூஸ் ஏவுகணை: 2 மணி நேரம்
- ட்ரோன் பறக்கும் நேரம்: 9 மணி நேரம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |