கப்பல் போக்குவரத்து முடக்கம்... எண்ணெய் உற்பத்தியை மொத்தமாக நிறுத்திய மத்திய கிழக்கு நாடொன்று
வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள எண்ணெய் வயல்களில் உற்பத்திய மொத்தமாக நிறுத்துவதாக ஈராக் அறிவித்துள்ளது.
ஏற்றுமதி முடக்கம்
ஈரான் மீதான போர் தீவிரமடைந்துவரும் நிலையில் ஹார்முஸ் நீரிணை ஊடாக கப்பல் போக்குவரத்து மொத்தமாக ஸ்தம்பித்துள்ளது. நாளுக்கு 135 கப்பல்கள் வரையில் கடக்கும் நிலையில், தற்போது கடந்த இரண்டு வாரங்களாக 90 கப்பல்கள் மட்டுமே கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹார்முஸ் நீரிணை விவகாரத்தால் ஈராக் உட்பட மத்திய கிழக்கில் பல நாடுகளின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி முடங்கியுள்ளது. ஹார்முஸ் நீரிணை ஊடாக உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் முன்னெடுக்கப்படுகிறது.
ஆனால், ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போர் காரணமாக பிராந்தியத்தில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி மிக மோசமாக பாதித்துள்ளது.
ஈராக்கின் பெரும்பாலான கச்சா எண்ணெய் ஏற்றுமதிகள் இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகின்றன. ஆனால் தற்போது ஏற்றுமதிகள் முடங்கியுள்ள நிலையில், சேமிப்புத் திறன் அதன் வரம்புகளை எட்டக் காரணமாகியுள்ளன.
இதனையடுத்தே, ஈராக் நிர்வாகம் Force Majeure என அறிவித்துள்ளது. அதாவது தவிர்க்க முடியாத காரணங்களால் உற்பத்தியை மொத்தமாக நிறுத்துவதாகும்.
இந்த நிலையில், தினசரி உற்பத்தியை கப்பல்களில் நிரப்ப உரிமையாளர்களால் முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஈராக்கின் SOMO எண்ணெய் நிறுவனம் ஏற்றுமதிக்கு தயாரான போதும், கப்பல்கள் நெருங்க முடியாமல் உள்ளது.

மறுபரிசீலனை செய்யப்படும்
தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உற்பத்தியை முழுமையாக நிறுத்துமாறு அமைச்சகம் உத்தரவிட்டது; ஒப்பந்த விதிமுறைகளின்படி, இந்த நடவடிக்கையினால் எவ்வித இழப்பீடும் வழங்கப்படாது என்றே கூறப்படுகிறது.
மேலும், பிராந்திய நிலவரங்களைப் பொறுத்து இந்த முடக்கம் அவ்வப்போது மறுபரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சகம் தெரிவித்ததோடு, தவிர்க்க முடியாத சூழ்நிலைகளின் கீழ் அத்தியாவசிய செயல்பாடுகள், செலவுகள் மற்றும் பணியாளர்கள் குறித்து உடன்பாடு காண அவசரப் பேச்சுவார்த்தைகளுக்கு நிறுவனங்களையும் அழைப்பு விடுத்துள்ளது.

இதனிடையே, நாட்டின் தெற்குத் துறைமுகங்கள் வாயிலான ஏற்றுமதிகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பஸ்ரா எண்ணெய் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி, நாளொன்றுக்கு 3.3 மில்லியன் பீப்பாய்களில் இருந்து 900,000 பீப்பாய்களாகக் குறைக்கப்பட்டுள்ளது என ஈராக்கின் எண்ணெய் வள அமைச்சர் ஹயான் அப்தெல்-கனி கூறியுள்ளார்.
ஈரானுடனான மூன்று வாரங்களாகத் தொடர்ந்து வரும் அமெரிக்கா-இஸ்ரேல் போர் தீவிரமடைந்த நிலையில், சர்வதேச எண்ணெய் விலைகள் வெள்ளிக்கிழமையன்று கடந்த ஏறக்குறைய நான்கு ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டின என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |