ட்ரம்ப் மகள் இவாங்காவை கொல்ல திட்டம்., ஈரானுக்கு தொடர்புடைய பயங்கரவாதி கைது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பின் மகள் இவாங்கா ட்ரம்பை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தொடர்புடைய பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈராக்கை சேர்ந்த மொஹம்மது பாகர் சாட் தாவூத் அல்-சாதி என்ற அந்த நபர், ஆறு ஆண்டுகளுக்கு முன் பாக்தாத்தில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில், உயிரிழந்த தனது குரு காசிம் சுலைமானிக்காக, பழிவாங்கும் நோக்கில் இவாங்காவை குறிவைத்து திட்டமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர், இவாங்காவின் ஃப்ளோரிடா இல்லத்தின் வரைபடத்தையும், “அமெரிக்கர்களே, உங்கள் அரண்மனைகள், ரகசிய சேவை எதுவும் உங்களை காப்பாற்றாது” என்ற எச்சரிக்கை செய்தியையும் வெளியிட்டிருந்தார்.
காசிம் சுலைமானி, 1979 முதல் 2020 வரை ஈரானின் IRGC-ல் இராணுவ அதிகாரியாக இருந்தவர்.
அல்-சாதி, ஈராக்-ஈரான் போராளி வலையமைப்பில் முக்கிய நபராக இருந்தார். மே 15 அன்று துருக்கியில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு ஒப்படைக்கப்பட்டார்.
அவர், அமெரிக்கா மற்றும் யூதர்களை குறிவைத்து பல தாக்குதல்களை திட்டமிட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
இதில் ஆம்ஸ்டர்டாமில் வங்கிக் கட்டிடத்திற்கு தீவைத்தல், லண்டனில் யூதர்கள் மீதுதாக்குதல் நடத்துதல், ரொறன்ரோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு போன்றவற்றை அவர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
சுலைமானியை தந்தைபோல் மதித்த அல்-சாதி, அவரது மரணத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இவாங்காவை குறிவைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அவர் அமெரிக்காவில் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |