ட்ரோன்களை வீழ்த்திய புதிய ஆயுதம் - பகிரங்கமாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல்
ஆளில்லா விமான தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள லேசர் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் அரசு, தற்போது நடைபெற்று வரும் யுத்தத்தின் போது ட்ரோன் தாக்குதல்களை தடுக்க லேசர் ஆயுதங்களை பயன்படுத்தியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் தனது Directed-energy தொழில்நுட்பங்களை போர்க்களத்தில் பயன்படுத்தும் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், Iron Beam எனப்படும் 100-kilowatt laser interceptor-ன் prototype பதிப்புகள் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், நிலையான விமான ட்ரோன்கள் மீது வெற்றிகரமாக தாக்கியுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
மூலதன செலவு மிகக்குறைவு - ஒரு தாக்குதலுக்கு வெறும் 5 டொலர் மட்டுமே செலவாகும் இந்த தொழில்நுட்பம், எதிர்காலத்தில் அளவிலான ட்ரோன் தாக்குதல்களை கையாள எளிமையான, மலிவான மாற்று தீர்வாக அமையக்கூடும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரயேல் கட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 2023 முதல் இஸ்ரேல் மீது 26,000-க்கும் மேற்பட்ட விமான தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. பெரும்பாலான தாக்குதல்களை Iron Dome மற்றும் Arrow முறைமைகள் தடுக்கச் செய்தன. ஆனால், பல ட்ரோன்கள் அனைத்தையும் மீறிக் கடந்துள்ளன.
Rafael Advanced Defense Systems மற்றும் Elbit Systems Ltd. இணைந்து உருவாக்கிய Iron Beam முழுமையான அமைப்பு 6 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், மேகம், பனிமூட்டம் போன்ற சூழ்நிலைகளில் செயல்பட முடியாதது இந்த ஆயுதத்தின் குறையாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Israel laser weapon, Iron Beam laser system, Israel drone attack defense, Directed energy weapons, Israel war technology, Rafael laser interceptor, Elbit Systems laser, Laser defense system Israel, Iron Dome vs Iron Beam, Israel missile defense