ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கு செல்வோம்., குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்த கமலா ஹாரிஸ்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், தனது குழந்தை பருவத்தை தமிழ்நாட்டில் கழித்ததை நினைவு கூர்ந்தார்.
இந்தியா ஒட்டுமொத்த உலகையே வடிமைத்துள்ளது
அமெரிக்கா சென்றிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வெள்ளிக்கிழமை மதிய விருந்து அளிக்கப்பட பிறகு, உரையாற்றிய கமலா ஹாரிஸ், இந்தியாவின் வரலாறு மற்றும் போதனைகள், தன்னை மட்டும் பாதிக்கவில்லை, அவை ஒட்டுமொத்த உலகையே பாதித்து, வடிவமைத்துள்ளது என்று கூறினார். மேலும், இந்தியாவின் தனித்துவமான தத்துவங்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தியுள்ளது என்று கூறினார்.
இந்தியா தனது வாழ்க்கையின் மிக முக்கியமான அங்கம் என்றும், இந்தியாவுடன் தான் ஆழமாக இணைந்திருப்பதாகவும் கமலா ஹாரிஸ் கூறினார்.
PMModi/Twitter
தனது உரையின்போது, நெகிழ்ச்சியுடன் பேசிய கமலா ஹாரிஸ், தான் குழந்தையாக இருந்தபோது இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணங்களை நினைவு கூர்ந்தார்.
அம்மா ஒவ்வொரு வருடமும் இந்தியாவிற்கு அழைத்துச் செல்வார்
"நானும் என் சகோதரி மாயாவும் வளர்ந்து வரும் போது, எங்கள் அம்மா எங்களை ஒவ்வொரு வருடமும் பே ஏரியாவில் இருந்து இந்தியாவிற்கு அழைத்துச் செல்வார். அந்த பயணங்களின் நோக்கம் பல, அவள் எங்கிருந்து வந்தாள், அவளை இது உருவாக்கியது என்பதை நாங்கள் நன்கு புரிந்துகொள்ளலாம். நாங்கள் எங்கள் தாத்தா பாட்டி, மாமா மற்றும் எங்கள் சித்திகளுடன் நேரத்தை செலவிடலாம். நல்ல இட்லியின் மீதுள்ள அன்பை உண்மையில் அங்கு தான் புரிந்து முடியும்”என்று அவள் சிரித்தபடி கூறினார்.
AP
தாதாவின் எண்ணங்கள் என் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தியது
கமலா ஹாரிஸ், தனது தாத்தா, பாட்டி, அப்போது மெட்ராஸ் என அழைக்கப்பட்ட சென்னையில் வசிப்பதாக கூறினார். என் தாத்தா என் வாழ்க்கையில் பிடித்தவர்களில் ஒருவர். குழந்தை பருவத்தில் நாங்கள் ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருந்தோம். என் தாத்தா என் மீது பெரும் செல்வாக்கு செலுத்தினார். குடும்பத்தில் மூத்த பேத்தி நான் என்பதால். அதனால் குடும்பத்தில் அந்தச் சூழலை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டேன்.
AP
தாத்தா அரசு ஊழியர், ஓய்வுக்குப் பிறகு அவர் காலையில் கடற்கரையில் வாக்கிங் செல்வது வழக்கம். நான் அவர்களுடன் செல்வது வழக்கம். சுதந்திரப் போராட்ட வீரர்கள், நாட்டின் ஸ்தாபக மாவீரர்கள், இந்தியாவின் சுதந்திரம் பற்றி தாத்தாவின் கதைகளைக் கேட்பது வழக்கம். ஊழலை எதிர்த்துப் போராடுவதும், சமத்துவத்துக்காகப் போராடுவதும், மதம், ஜாதி எதுவாக இருந்தாலும் சரி என்று அவர் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. சிறுவயதில் தாத்தாவுடனான தொடர்புகள் அவரது சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கமலா ஹாரிஸ் கூறினார்.
தமிழ்நாட்டில் கற்றுக்கொண்ட பாடங்கள்தான் பொதுமக்களுக்குச் சேவை செய்ய என்னைத் தூண்டியது
எனது தாத்தா எனக்கு ஜனநாயகத்தின் அர்த்தத்தை மட்டும் போதித்தது மட்டுமல்லாமல் ஜனநாயகத்தை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றிய பாடத்தையும் எனக்குக் கற்றுக் கொடுத்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் சிறு வயதில் கற்றுக்கொண்ட இந்தப் பாடங்கள்தான் பொதுமக்களுக்குச் சேவை செய்ய முதலில் என்னைத் தூண்டியது என்று நான் நம்புகிறேன். நான் இப்போது திரும்பிப் பார்க்கிறேன், அது என்னிலும் என் சிந்தனையிலும் ஏற்படுத்திய தாக்கத்தை நான் முழுமையாக உணர்கிறேன்.
என் தாத்தா பி.வி.கோபாலன் மற்றும் அவரது மகள் என் அம்மா ஷியாமளா ஆகியோரின் அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு மற்றும் தைரியத்திலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள்தான் இன்று நான் இங்கு இருக்கிறேன் என்பதில் பெரும் பங்கு உள்ளது. அதனால்தான் இன்று அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உங்கள் முன் நிற்கிறேன், என நெகிழ்ச்சியுடன் பேசினார்.
Keywords: Kamala Harris, Idli Love, Madras, Indian History and Culture, Vice President of America, United States of America, PM Modi US Visit, Tamil Culture, Kamala Harris Family
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |