கடவுளின் பேரால் நடந்த கொடூரம்..குழந்தைகளையும் விட்டு வைக்காத போலி பாதிரியார்: 201 உடல்கள் மீட்பு

Crime Kenya Death
By Sibi May 16, 2023 04:45 AM GMT
Report

கென்யாவில் கடவுளை காணலாம் எனக்கூறி விரதம், தற்கொலை செய்ய வைத்ததில் குழந்தைகள் உட்பட 201 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடவுளின் பேரால் நடந்த கொடூரம்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மலிண்டி என்ற கடலோர நகரத்தின் அருகே உள்ள ஷகாலோ என்ற வனப்பகுதியில், சிலரது உடல்கள் புதைந்து கிடைக்கின்றன என கடந்த மாதம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கடவுளின் பேரால் நடந்த கொடூரம்..குழந்தைகளையும் விட்டு வைக்காத போலி சாமியார்: 201 உடல்கள் மீட்பு@AP

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறிப்பிட்ட இடத்தை சுற்றி தோண்ட, தோண்ட பொலிஸார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். முதற்கட்டமாக தோண்டப்பட்டதில் 47 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியானது.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், சர்வதேச கிருத்துவ ஆலயத்தின் பாதிரியாரான பால் தேங்கி மெக்கன்சி என்பரை சிலர் கும்பலாக பின்பற்றி, பின்னர் அவரது சீடர் ஆகியுள்ளனர்.

சொர்க்கத்துக்கு போக வேண்டுமா

பாதிரியாரின் அறிவுரைப்படி, சொர்க்கத்துக்கு போக வேண்டும் என்றால் பட்டினி கிடக்கும்படி அந்த சீடர்களிடம் கூறப்பட்டு உள்ளது. அவர்களும் அதனை நம்பி பட்டினி கிடந்து உள்ளனர்.

கடவுளின் பேரால் நடந்த கொடூரம்..குழந்தைகளையும் விட்டு வைக்காத போலி சாமியார்: 201 உடல்கள் மீட்பு@Reuters

இதில் நிறைய பேர் பட்டினியால் உயிரிழக்கவே, ஆலயத்தின் குழு அவர்களை அங்கிருந்த காட்டில் புதைத்து வைத்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் அந்த கும்பலிலிருந்து 15 பேரை பொலிஸார் மீட்டுக் காப்பாற்றி உள்ளனர்.

இதில் நான்கு பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கிருந்த 800 ஏக்கர் வனப்பகுதியும் சீல் வைக்கப்பட்டு, பின்னர் தொடர்ந்து பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் பல அதிர்ச்சியூட்டும் விசயங்கள் தெரிய வந்துள்ளன.

குழந்தைகளே முதல் இலக்கு

தற்போது தடய அறிவியல் குழு இன்று 27 உடல்களை வெளியே எடுத்துள்ளனர். இதுவரை அவர்கள் 201 உடல்களை மீட்டுள்ளனர். அதில் குழந்தைகள் தான் அதிகம் என்பது நம்மை சோகத்தில் ஆழ்த்தும் தகவலாக உள்ளது.

கடவுளின் பேரால் நடந்த கொடூரம்..குழந்தைகளையும் விட்டு வைக்காத போலி சாமியார்: 201 உடல்கள் மீட்பு@ap

பொதுவாக போலி சாமியார்களின் முதல் இலக்கே குழந்தைகளாக தான் இருந்துள்ளனர். குழந்தைகளை குடிசைக்குள் 5 நாட்கள் வரை உணவு அல்லது குடிநீரின்றி பூட்டி வைத்துள்ளனர்.

பின்னர் இறந்த குழந்தைகளின் உடலை போர்வையில் சுற்றிப் புதைத்துள்ளனர். இதில் கொடூரம் என்ன வென்றால் உயிரிழக்காத குழந்தைகளையும் அவர்கள் போர்வையில் சுற்றி புதைத்து வைத்தது தான்.

கடவுளின் பேரால் நடந்த கொடூரம்..குழந்தைகளையும் விட்டு வைக்காத போலி சாமியார்: 201 உடல்கள் மீட்பு@reuters

மீட்கப்பட்ட உடலில் சில மின் வயர்களால் கட்டப்பட்டு இருந்திருக்கின்றன. மேலும் சில உடல் பாகங்கள் காணாமல் போகியுள்ளன. இதனால் உடல் உறுப்புகளை திருடும் கும்பல் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறதா என பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.

இதனை தொடர்ந்து பாதிரியார் மெக்கன்சி மற்றும் அவரது மனைவி மற்றும் அந்த கும்பல்களை கைது செய்து, பொலிஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.       

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US