உக்ரைனில் நீர்மின் நிலைய அணை அழிவு! ரஷ்ய பயங்கரவாதிகள் தான் காரணம்..அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட ஜெலென்ஸ்கி
சோவியத் கால அணையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பால், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நீர்மின் நிலைய அணை தகர்க்கப்பட்டது தொடர்பான வீடியோவை ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார்.
நீர்மின் நிலைய அணை
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு உக்ரைன் பகுதியில் சோவியத் கால ககோவ்கா நீர்மின் நிலைய அணை உள்ளது. நீர்மின் நிலையத்திற்கு நீரை வழங்கும் முக்கிய அணை இதுவாகும்.
இந்த அணை 2014யில் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்திற்கும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள Zaporizhzhia அணுமின் நிலையத்திற்கும் தண்ணீர் வழங்குகிறது.
இதில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் அணை உடைந்து வெள்ளம் உண்டாகியுள்ளது. இதற்கு காரணம் யார் என்று தெரியாத நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா ஒருவரையொருவர் குற்றம்சாட்டுகின்றனர்.
அதே சமயம், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான Zaporizhzhia அணுமின் நிலையத்திற்கு அணை அழிந்ததால் எந்த ஆபத்தும் இல்லை என்று ரஷ்யாவால் நிறுவப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பதிவு
இந்நிலையில், அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டது தொடர்பான வீடியோவை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பகிர்ந்துள்ளார்.
அத்துடன், 'ரஷ்ய பயங்கரவாதிகள். ககோவ்கா நீர்மின் நிலைய அணையின் அழிவு, உக்ரேனிய நிலத்தின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பதை முழு உலகிற்கும் உறுதிப்படுத்துகிறது' என ஆவேசமாக தனது பதிவில் அவர் கூறியுள்ளார்.
Russian terrorists. The destruction of the Kakhovka hydroelectric power plant dam only confirms for the whole world that they must be expelled from every corner of Ukrainian land. Not a single meter should be left to them, because they use every meter for terror. It’s only… pic.twitter.com/ErBog1gRhH
— Володимир Зеленський (@ZelenskyyUa) June 6, 2023
இதற்கிடையில், ஷெல் தாக்குதலால் இந்த அணை அழிக்கப்பட்டதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என ரஷ்யாவால் நிறுவப்பட்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
Reuters
Reuters