மலேசியாவில் ஆற்றில் விழுந்த பொலிஸ் ஹெலிகாப்டர்: வைரல் வீடியோ காட்சி!
மலேசியாவின் ஜோகூர் மாநிலம் புலாய் ஆற்றில் நேற்று ஒரு பொலிஸ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், இரண்டு மூத்த அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
பயிற்சிப் பணியின் போது இந்த விபத்து நடந்ததாக மலேசிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை (CAAM) உறுதி செய்துள்ளது.
10/07/2025
— Elizabeth Vstx (@EVostox) July 10, 2025
"9M-PHG Down"
BREAKING NEWS. On 0951Hrs today. A Royal Malaysian Police Eurocopter AS355 (9M-PHG) crashed at Pulai River in Gelang Patah, Johor. All 5 occupants survived and rescued by nearby Marine Police and MMEA boat. Investigation will conducted by AAIB pic.twitter.com/EVmiRIcqZJ
விபத்து நடந்த உடனேயே, மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டு, விமானி உட்பட ஹெலிகாப்டரில் இருந்த ஐந்து பேரையும் பத்திரமாக மீட்டனர்.
காயமடைந்த ஐந்து பேரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து நடந்ததைக் காட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |