பிரித்தானியாவில் அதிகரிக்கும் யூத விரோதம்- ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ள பில்லியனர்
பிரித்தானியாவில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துவருவதாக கூறி, பிரபல யூத பில்லியனர் சர் மைக்கேல் மோரிட்ஸ் (Sir Michael Moritz) ஜேர்மன் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளார்.
Cardiff-ல் பிறந்த மோரிட்ஸ், நாசி ஜேர்மனியிலிருந்து தப்பிய தம்பதியின் மகனாவார். அவரது தாத்தா-பாட்டி ஹாலோகாஸ்ட் காலத்தில் உயிரிழந்தவர்கள்.
இந்த வரலாற்று பின்னணியில், ஜேர்மனி தனது கடந்தகாலத்தை நேர்மையாக எதிர்கொண்ட நாடு என அவர் கருதுகிறார்.
இந்த முடிவு, பிரித்தானியாவை விட்டு வெளியேறவேண்டும் என்பதல்ல, ஆனால், யூதர்களுக்கு எதிரான சூழல் அதிகரித்து வரும் நிலையில், தனக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கும் ஒரு அடையாளம் என மோரிட்ஸ் கூறுகிறார்.

சில ஆண்டுகளாக பிரித்தானியாவில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. 2025-ல் மான்செஸ்டரில் உள்ள யூத வழிபாட்டு சபையில் நடந்த தாக்குதலால், பள்ளிகள் மற்றும் வழிப்பாட்டு தளங்களில் பொலிஸ் பாதுகாப்பு தேவையை ஏற்படுத்தியது.
சமூகத்தில் யூத அடையாளங்களை வெளிப்படையாக காட்டுவதற்கு பல குடும்பங்கள் தயக்கம் காட்டுகின்றன.
ஜேர்மனியின் சட்ட மற்றும் கல்வி அமைப்புகள் ஹாலோகாஸ்ட் நினைவுகளை அளிப்பதாகவும், இது தனக்கு நம்பிக்கையை அளிக்கிறது என்றும் மோரிட்ஸ் கூறுகிறார்.
Google, Yahoo போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து வெற்றியடைந்த மோரிட்ஸ், வேல்ஸின் மிகப் பாரிய செல்வந்தராக கருதப்படுகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Michael Moritz German citizenship, Jewish billionaire UK antisemitism, Antisemitism rise in Britain, Holocaust descendants Germany law, Sequoia Capital Michael Moritz news, UK Jewish community safety #MichaelMoritz #GermanCitizenship #Antisemitism #JewishIdentity #UKNews #HolocaustDescendants #SequoiaCapital