வீட்டிலிருந்து வேலை செய்வதை சட்டப்பூர்வ உரிமையாக அறிவிக்கவுள்ள ஐரோப்பிய நாடு!
வீட்டிலிருந்து வேலை செய்வதை சட்டப்பூர்வ உரிமையாக ஐரோப்பிய நாடான நெதர்லாந்து சட்டம் கொண்டு வரவுள்ளது.
கோவிட்-19 உலகம் முழுவதும் உள்ள மக்களின் பணி முறைகளை மாற்றியுள்ளது. பலர் இப்போது அலுவலகத்தில் இருந்து வேலை செய்வதை விட வீட்டிலிருந்து வேலை செய்ய விரும்புகிறார்கள்.
சில நிறுவனங்கள் படிப்படியாக அலுவலகத்திலிருந்து வேலையைத் தொடங்கும் அதே வேளையில், நெதர்லாந்தில் உள்ளவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை சட்டப்பூர்வ உரிமையாக விரைவில் அனுபவிக்க முடியும்.
ஊடக அறிக்கைகளின்படி, நெதர்லாந்தில் உள்ள இரண்டு டச்சு எம்.பி.க்கள் தொலைதூரத்தில் வேலை செய்யும் வசதியை சட்டப்பூர்வமாகவே அனுமதிக்கும் வகையில் புதிய சட்டத்தை முன்மொழிகின்றனர். இந்தச் சட்டம் மக்கள் வீட்டிலிருந்து வேலை (Work From Home) செய்வதை சட்டப்பூர்வ உரிமையாகக் கோர அனுமதிக்கும்.
இதையும் படிங்க: 10 வினாடிகள் ஒற்றைக் காலில் நிற்க முடியவில்லையா.., மரண எச்சரிக்கை விடுக்கும் ஆய்வு
Bloomberg உடனான உரையாடலில், ஐரோப்பிய சார்பு D-66 கட்சியின் உறுப்பினர் ஸ்டீவன் வான் வெயன்பெர்க் (Steven van Weyenberg), பசுமைக் கட்சிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் சென்னா மாடூக் (Senna Maatoug) உடன் இணைந்து இந்தப் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தப் போவதாகத் தெரிவித்தார்.
ஜூலை 3-ஆம் திகதி கோடை விடுமுறைக்கு வருவதற்கு முன், சட்டத்தை வரவேற்கும் வகையில் ஒரு திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.
இச்சட்டத்தைப் பற்றிய கூடுதல் விவரங்களைக் கொடுத்த வெயன்பெர்க், "ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் சங்கங்கள் ஆகிய இருவரிடமிருந்தும் நாங்கள் பெற்ற ஆதரவிற்கு நன்றி, இந்த புதிய சட்டத்திற்கு நாங்கள் பச்சை விளக்கு காண்பிக்கவுள்ளோம்.
கோடைகாலத்திற்கு முன்பு இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்று நாங்கள் மிகவும் நம்புகிறோம்" என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: கந்தல் பொம்மையை திருமணம் செய்த பெண்ணுக்கு குழந்தை..!
கோவிட்-19 தொற்றுநோய் வேலை முறைகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. தொற்றுநோய் படிப்படியாக குறைந்து வருவதால், ஊழியர்கள் அலுவலகத்திற்குத் திரும்புமாறு நிறுவனங்கள் அழுத்தம் கொடுக்கின்றன.
வீட்டிலிருந்து வேலை செய்வதன் நன்மை தீமைகள் ஒவ்வொரு கார்ப்பரேட் அலுவலகத்திலும் விவாதப் பொருளாகத் தொடர்கின்றன.
சமீபத்தில், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் நிறுவன ஊழியர்களை அலுவலகத்தில் இருந்து பணியைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.