30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிரபல தொழில்நுட்ப நிறுவனம்
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Oracle, தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய பணிநீக்கத்தை மேற்கொண்டுவருகிறது.
ஜூன் 1 முதல் ஜூன் 15-ஆம் திகுதிக்குள் உலகளவில், சுமார் 30,000 பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறவுள்ளனர். இது Oracle நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் சுமார் 18 சதவீதம் ஆகும்.
இந்த பணிநீக்கம், நிறுவனத்தின் நிதி சிக்கல்களால் அல்லாமல், AI மற்றும் Cloud Infrastructure மீது அதிக கவனம் செலுத்தும் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது.

Oracle, 2026 நிநிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 17.2 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 22 சதவீதம் அதிகம்.
Cloud தொடர்பான வருமானம் மட்டும் 44 சதவீதம் உயர்ந்து 8.9 பில்லியன் டொலர் ஆகியுள்ளது. AI சார்ந்த வணிகங்கள் இன்னும் வேகமாக வளர்ந்துள்ளன. AI Infrastructure வருமானம் 243 சதவீதம் உயர்ந்துள்ளது. Multi-Cloud Database வருமானம் 531 சதவீதம் உயர்ந்துள்ளது.
நிறுவனம், 2026 நிதியாண்டில் 50 பில்லியன் டொலர் முதலீட்டை AI Infrastructure மற்றும் Data Center வளர்ச்சிக்காக ஒதுக்கியுள்ளது. OpenAI மற்றும் SoftBank ஆதரவு பெற்ற Stargate AI திட்டத்தில் Oracle முக்கிய பங்காற்றுகிறது.
Oracle-ன் நீண்டகால AI சேவைகளுக்கான Performance Obligations 553 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், நிறுவனம் 135 பில்லியன் டொலர் கடன் வைத்திருப்பதால், மூலதனத்தை திறமையாக பயன்படுத்துவது அவசியமாகியுள்ளது.
இந்த பணிநீக்கம், Oracle-ன் AI மையப்படுத்தப்பட்ட எதிர்கால வளர்ச்சி திட்டத்தின் ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |