உக்ரைனில் பயங்கர தாக்குதல் நடத்திய புடின் தளபதி: பட்டப்பகலில் மர்ம நபரால் சுட்டுக்கொலை
உக்ரைன் மீது பயங்கர ஏவுகணைத் தாக்குதல் நடத்தியவர் என கருதப்படும் புடினுடைய கடற்படை தளபதி ஒருவர், பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜாகிங் சென்றபோது நிகழ்ந்த பயங்கரம்
உக்ரைன் மீது பயங்கர ஏவுகணைத் தாக்குதல் நடத்தியவர் என கருதப்படும் புடினுடைய கடற்படை தளபதியான ஸ்டானிஸ்லாவ் (Stanislav Rzhitsky, 42) என்பவர், பட்டப்பகலில், ஜாகிங் சென்றபோது மர்ம நபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
Credit: East2West
ரஷ்யாவிலுள்ள Krasnodar என்ற நகரில், அவர் ஜாகிங் சென்றுகொண்டிருக்கும்போது ஒருவர் அவரைத் துப்பாக்கியால் சுட்டார், நெஞ்சிலும் முதுகிலும் நான்கு முறை சுடப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
அவரது கைக்கடிகாரம் முதலான எந்த பொருளும் திருட்டு போகாததால், இது கொள்ளை முயற்சி அல்ல என தெரியவந்துள்ளது.
Credit: AP
மறக்கமுடியாத சம்பவம்
உக்ரைன் நகரமான Vinnytsia மீது ஏவுகணை ஒன்றை ஏவ ஸ்டானிஸ்லாவ் உத்தரவிட, அந்த ஏவுகணை 27 பேரை பலிகொண்டது.
உயிரிழந்தவர்களில், நான்கு வயதுக் குழந்தையான லிஸாவை (Liza Dmitrieva) யாராலும் மறக்கமுடியாது. லிஸாவின் தாய் ஐரினா அவளை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வரும்போது அவர்கள் இருவரும் ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளானார்கள். தாக்குதலில் லிஸா கொல்லப்பட்டாள், அவளது தாய் படுகாயமடைந்தார்.
Credit: East2West
இதற்கிடையில், ஸ்டானிஸ்லாவை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர், CCTV இல்லாத இடத்தில் வைத்துத்தான் அவரைத் தாக்கியுள்ளார். என்றாலும், தாங்கள் நீல நிற தொப்பி அணிந்த நடுத்தர வயது ஆண் ஒருவரைத் தேடிவருவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
Credit: East2West
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |