இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் - வெளிவந்த உண்மை
இந்தியாவுடன் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பாகிஸ்தான் ஒரு பாரிய பொருளாதார ஒப்பந்தத்தை ரஷ்யாவுடன் கையெழுத்திட்டுள்ளதாக சமீபத்தில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.
அதாவது, 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தின் கீழ், கராச்சியில் ஒரு நவீன எஃகு தொழிற்சாலை கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
1970-களில் சோவியத் ஒன்றியத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட Pakistan Steel Mills (PSM), 2015-ஆம் ஆண்டு மூடப்பட்டது. தற்போது ரஷ்யாவின் நவீன எஃகு உற்பத்தி தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதனை மீண்டும் இயங்க செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் இத்தகவல்கள் எதுவும் உண்மையல்ல வெறும் வதந்திகள் தான் என தெரியவந்துள்ளது.
போலி அறிக்கைகள் பரவத் தொடங்கிய நிலையில், பாகிஸ்தானுடன் பல பில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் ரஷ்யா கையெழுத்திட்டுள்ளதாக வெளியான தகவலை ரஷ்ய அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த செய்தி மிகைப்படுத்தப்பட்டது மற்றும் இந்தியாவுடனான அதன் உறவை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டது என்றும் ரஷ்யா தெளிவுபடுத்தியுள்ளது.
ரஷ்யாவும் பாகிஸ்தானும் 2.6 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக வெளியான செய்திகளில் நம்பகமான ஆதாரங்கள் இல்லை என்று ஸ்புட்னிக் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நட்பு நாட்டிற்கு எதிராக சீனாவின் 24 JF-17 போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான் நட்பு நாடு
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia Pakistan steel deal, India Pakistan tensions 2025, Karachi steel plant project, Russia investment in Pakistan, Russia neutral on Kashmir, Strategic Russia-Pak ties, Fact Check, Russia Pakistan steel deal fake, Russia denies Pakistan steel deal, Moscow Pakistan multibillion contract, India Russia strategic partnership, Operation Sindoor impact, Russia India relations update