மிக ரகசியமாக 100 ஏவுகணைகளை வெளியேற்றிய ரஷ்யா: கொலைவெறி தாக்குதலுக்கு தயாராகிறாரா புடின்?
நட்பு நாடான பெலாரஸில் இருந்து 100 ஏவுகணைகளை ரஷ்யா ரகசியமாக வெளியேற்றியுள்ள தகவல் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
புடினின் உண்மை முகம்
உக்ரைன் போர் தொடர்பில் பலத்த தாக்குதலுக்கு விளாடிமிர் புடின் தயாராகி வருகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. S-300 மற்றும் S-400 ஏவுகணைகளை ரஷ்யா வெளியேற்றியுள்ளது, உக்ரேனின் சமீபத்திய பதிலடிகளுக்கு பயந்து தான் எனவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
@east2west
மேலும், புடினின் உண்மையான முகம் இனி வெளிப்படலாம் என்ற அச்சத்தையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர். மட்டுமின்றி, இந்த 100 ஏவுகணைகள் வெளியேற்றப்பட்டுள்ளது துரிதமான நடவடிக்கை எனவும், சமீபத்திய தாக்குதல்களுக்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால், புடினின் அடுத்த நகர்வு மிகக் கடுமையானதாக இருக்கும் என்றே ஊகிக்க முடிகிறது என்கிறார்கள். மேலும், அமெரிக்க ராணுவ தரப்பு தெரிவிக்கையில் செவ்வாய்க்கிழமை மட்டும் 111 ஏவுகணை தாக்குதல் மற்றும் 26 ட்ரோன் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
@reuters
போருக்கான ஆயத்தம்
இது கடந்த 9 மாதங்களில் முதன்முறை எனவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. இதில் ஒரு ஏவுகணை போலந்து எல்லையில் விழுந்துள்ளதுடன் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
மட்டுமின்றி, நவம்பர் 9ம் திகதி முதல் 13ம் திகதி வரையில் IL-76 வகை மிகப் பெரிய ராணுவ சரக்கு விமானங்கள் 20 எண்ணிக்கையில் பெலாரஸிலிருந்து மேற்கு மற்றும் தெற்கு ரஷ்யா வரை பறந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
@Tass
ஒவ்வொரு விமானமும் குறைந்தது 70 ஏவுகணைகளை கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யா அடுத்தகட்ட போருக்கான ஆயத்தங்களை முன்னெடுக்கும் நிலையில், நட்பு நாடுகளில் இருந்து தற்காப்பு ஆயுதங்களை பெறும் கட்டாயத்திற்கு உக்ரைன் தள்ளப்பட்டுள்ளது.