BrahMos-ஐ விட வேகமான ஏவுகணை., ரஷ்யா-வடகொரியாவால் பல நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல்
ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
ரஷ்யா மற்றும் வடகொரியாவுக்கு இடையே நடைபெறும் இராணுவ ஒத்துழைப்பு தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று மே 29-ஆம் திகதி சியோலில் வெளியிடப்பட்டது.
பன்னாட்டு கண்காணிப்பு குழுவின் (MSMT) அறிக்கையின்படி, 2024 நவம்பரிலிருந்து ரஷ்யா, வடகொரியாவுக்கு ‘Pantsir’ எனப்படும் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பு, மின்னணு ஜாமர்கள் மற்றும் போர் வாகனங்களையும் வழங்கியுள்ளது.
இது, ஐநா விதித்த தடைச் சட்டங்களை முற்றிலுமாக மீறும் செயல் ஆகும்.
Pantsir ஏவுகணை அமைப்பு, எதிரி விமானங்களையும் ஏவுகணைகளையும் தாக்கும் சக்தி கொண்டது. இதில் உள்ள ஏவுகணைகள் Mach 3.2 வேகத்துடன் செல்லக்கூடியவை. இது இந்தியாவின் பிரம்மோஸ் (BrahMos) ஏவுகணையின் மெச்சு 3 வேகத்தைவிட அதிகம்.
அதே சமயம், வடகொரியா, 2023 செப்டம்பரிலிருந்து, ரஷ்யாவுக்கு 20,000 கண்டெய்னர்களில் ஆயுதங்களை அனுப்பியுள்ளது.
இதில் 9 மில்லியன் பீரங்கி ரவுண்டுகள், நூற்றுக்கணக்கான ஏவுகணைகள், கனரக பீரங்கிகள் மற்றும் டாங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஆயுதங்கள் உள்ளிட்டவை உள்ளன. இவை மூன்று பிரிகேட்களுக்கு போதுமான அளவு ஆயுதங்களாகும்.
2023-இல், ரஷ்ய விமானங்கள் (IL-76, AN-124) மூலம் இந்த ஆயுதங்கள் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் அனுப்பப்பட்டன. மேலும், வடகொரியாவின் ஏவுகணை வழிநடத்தல் (guidance) தொழில்நுட்பத்தையும் ரஷ்யா மேம்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.
500,000 பேரல்களுக்கு மேல் எண்ணெய் (1 மில்லியன் பேரல்) அனுப்பப்பட்டதும், 8,000 வடகொரிய தொழிலாளர்களை அனுப்பியதும், ஐநா தடைகளை மீறிய செயல்தான் என அறிக்கை வலியுறுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia North Korea missile deal, Pantsir missile system, Faster than BrahMos missile, Russia violates UN sanctions, North Korea military aid, Russia North Korea weapons trade, South Korea Japan missile threat, Russian oil to North Korea, UN Security Council violations, North Korea Pantsir system, Kim Jong Un Russia military deal, North Korea air defense system