தென்னாப்பிரிக்காவில் எரிவாயு கசிவு விபத்து: பெண்கள், குழந்தைகள் உட்பட 16 பேர் பலி
தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு கசிவு விபத்து
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு அருகில் உள்ள போக்ஸ்பர்க்கில் ஏற்பட்ட எரிவாயு கசிவு விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 16 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மேலும் இரண்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Sky News
வேறுபடும் இறப்பு எண்ணிக்கை
உயிரிழப்புகள் எண்ணிக்கை 16 என பொலிஸார் அறிக்கை தகவல் தெரிவித்து இருக்கும் நிலையில், உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய தகவலில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 24-ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உள்ளூர் அவசர கால பேரிடர் மேலாண்மை சேவையின் செய்தி தொடர்பாளர் வில்லியம் என்ட்லாடி மாநில ஒளிப்பரப்பாளரான SABC-க்கு வழங்கிய தகவலில், தற்போதைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 என தெரிவித்துள்ளார்.
sky news
இதில் பெண்களும், குழந்தைகளும் உள்ளடங்கி இருக்கலாம் என நம்புவதாகவும் என்ட்லாடி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் மீட்பு குழு எரிவாயு கசிவு ஏற்பட்ட 100 மீட்டர் சுற்றளவில் வேறு ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்று சோதனையிட்டு வருகின்றனர்.
இந்த எரிவாயு கசிவானது சட்டவிரோதமாக நடைபெறும் சுரங்க நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என உள்ளூர் அறிக்கைகள் தகவல் தெரிவிக்கின்றன, ஆனால் அவை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று செய்தி தொடர்பாளர் வில்லியம் என்ட்லாடி குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |