போர் கப்பல் ஏவுதல் தோல்வியால் தூக்கிலிடப்பட்ட கிம்மின் இராணுவ தளபதி? சந்தேகத்தை தூண்டிய புகைப்படம்
வடகொரியா ஜனாதிபதி கிம் உடனான புகைப்படத்தில் இராணுவத் தளபதியும், மற்றொரு அதிகாரியும் இல்லாதது தூக்கிலிடப்பட்டதாக ஊகங்களை தூண்டியுள்ளது.
போர்க்கப்பல் ஏவுதல் தோல்வி
கடந்த மே மாதம் 21ஆம் திகதி வடகொரியாவின் Choe Hyon வகை அழிப்பு போர்க் கப்பல், அதன் தொடக்க நாளிலேயே தோல்வியடைந்தது.
அதனைத் தொடர்ந்து, கப்பல் துறைமுக தலைமை பொறியாளர், உடலமைப்பு பணிப்பாளர், நிர்வாக துணை மேலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியானது.
ஆனால், தோல்வியடைந்த போர்க்கப்பல் ஏவுதல் குறித்து கிம் ஜாங்-உன் கோபமடைந்ததால், இராணுவத் தளபதி உட்பட இருவர் தூக்கிலிடப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் பரவின.
சந்தேகத்தை தூண்டிய புகைப்படம்
இந்த நிலையில், கடற்படைத் தளபதி அட்மிரல் கிம் மியோங் சில் மற்றும் கப்பல் கட்டும் தளத் தலைவர் ஹாங் கில் ஹோ ஆகியோர் கிம் உடன் இல்லாதது போன்ற புகைப்படம் ஒன்று, அவர்கள் தூக்கிலிடப்பட்டிருக்கலாம் என்ற ஊடகங்களை தூண்டியுள்ளது.
அரசு தொலைக்காட்சியில் முதலில் ஒளிபரப்பப்பட்ட புகைப்படங்களில் இருந்து அதிகாரிகள் மறைந்துவிட்டதாகத் தெரிகிறது.
NK லீடர்ஷிப் வாட்ச் நிறுவனர் மைக்கேல் மேடன் தி சன் பத்திரிகையிடம் இதுகுறித்து கூறுகையில், வடகொரிய அதிகாரியை அரசு ஊடகப் படத்தில் இருந்து நீக்கியது 'குறிப்பிட்ட நபர் தூக்கிலிடப்பட்டதற்கான வலுவான அறிகுறியாகும்' என கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |