6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப்
30,000 பவுண்டுகள் எடையுள்ள ஆறு பிரமாண்டமான பதுங்கு குழி வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி தளத்தை முற்றிலும் அழித்ததாக ஜனாதிபதி ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவிடம் மட்டுமே
400 மைல்கள் தொலைவில் உள்ள அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்பட்ட 30 Tomahawk ஏவுகணைகளால் ஈரானில் உள்ள மேலும் இரண்டு அணுசக்தி தளங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
மட்டுமின்றி, பதுங்கு குழிகளை அழிக்கும் B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் உலகில் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது.
மட்டுமின்றி இந்த குண்டுகள் பூமியில் 200 அடி ஆழம் வரையில் சென்று வெடிக்கக் கூடியவை. போர்க்களத்தில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. இது முதன்முதலில் 1999ல் கொசோவோ போரின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.
அமெரிக்க இராணுவத்தால் அரிதாகவே பயன்படுத்தப்படும் இந்த விமாம் ஒவ்வொன்றின் விலை சுமார் 1 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது. உலகின் எந்த இடத்தையும் சில மணி நேரங்களுக்குள் இந்த விமானங்களால் அடைய முடியும் என்றே இதன் தயாரிப்பாளர்களான Northrop Grumman நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களையும் அவர்களின் நிலத்தடி பதுங்கு குழிகளையும் அழிக்க கடந்த ஆண்டு அக்டோபரில் அமெரிக்க இராணுவம் கடைசியாக B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு போர் விமானத்தைப் பயன்படுத்தியது.
மட்டுமின்றி, ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியாவிலும் குண்டுவீச்சுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை மிசோரியில் உள்ள வைட்மேன் விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்களில் ஆறு குவாமில் உள்ள ஆண்டர்சன் விமானப்படை தளத்திற்கு நகர்த்தப்பட்டது.
சீர்படுத்த முடியாத சேதம்
எந்த வகையான குண்டுகள் வீசப்பட்டன என்பதை ட்ரம்ப் உடனடியாகக் குறிப்பிடவில்லை. வெள்ளை மாளிகையும் பென்டகனும் இந்த நடவடிக்கை குறித்து விரிவான விளக்கம் கூறவில்லை. அடுத்த இரண்டு வாரங்களில் ஃபோர்டோ பகுதி மீது குண்டுவீசுவது குறித்து இறுதி முடிவை எடுப்பேன் என்று ட்ரம்ப் முன்னதாகவே குறிப்பிட்டிருந்தார்.
ஈரானை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அமெரிக்காவிற்கு சீர்படுத்த முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்று ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமெனி புதன்கிழமை அமெரிக்காவை எச்சரித்திருந்தார்.
அத்துடன், எந்தவொரு அமெரிக்க தலையீடும் இப்பகுதியில் ஒரு முழுமையான போருக்கு வழிவகுக்கும் என்று ஈரானிய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி அறிவித்திருந்தார்.
மேலும் ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் தயாரிக்க அனுமதிக்க மாட்டேன் என்று ட்ரம்ப் நீண்ட காலமாக உறுதியளித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |