மறுத்த மோடி; பாகிஸ்தான் இராணுவத் தளபதிக்கு..வெள்ளை மாளிகையில் விருந்து வைக்கும் ட்ரம்ப்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பாகிஸ்தானின் இராணுவ தளபதிக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விருந்து அளிக்கிறார்.
பாதிலேயே வெளியேறிய ட்ரம்ப்
கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் இருந்து டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பாதிலேயே வெளியேறியது பேசுபொருளானது.
அதனைத் தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடனான தொலைபேசி உரையாடலின்போது அமெரிக்காவிற்கு வருமாறு டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்தார்.
ஆனால், முன்னரே நிர்ணயிக்கப்பட்ட பணி அலுவல்களை காரணம் காட்டி இயலாது என பிரதமர் மோடி மறுத்துவிட்டார்.
அமெரிக்காவிற்கு செல்ல உள்ள பாகிஸ்தானின் தளபதி
இந்த நிலையில், பாகிஸ்தானின் இராணுவத் தளபதியான ஆஸிம் முனிர் (Asim Munir) அமெரிக்காவிற்கு செல்ல உள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்ப்பை சந்திக்கும் அவர், ஒன்றாக விருந்து சாப்பிட உள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் மோதல் நான் கூறியதால்தான் நின்றது என ட்ரம்ப் கூறிவரும் நிலையில், பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக, தொலைபேசி உரையாடலில் பாகிஸ்தானின் வேண்டுகோளினாலேயே சண்டையை நிறுத்தியதாகவும், ட்ரம்ப் அதற்கு காரணம் இல்லை என்றும் மோடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |