ரஷ்யா, சீனாவிடமிருந்து சைபர் அச்சுறுத்தல் - பில்லியன் பவுண்டு செலவில் பிரித்தானியா புதிய திட்டம்
பிரித்தானிய அரசு, நாட்டின் டிஜிட்டல் பாதுகாப்பை பலப்படுத்த 1 பில்லியன் பவுண்டு மதிப்பில் சைபர் மற்றும் செயற்கை நுண்ணறிவு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரஷ்யா, சீனா, வட கொரியா, ஈரான் போன்ற எதிரி நாடுகளிடமிருந்து ஏற்படும் சைபர் ஆபத்துகளை எதிர்க்க இது உருவாக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி, MoD Corsham-இல் இந்த புதிய திட்டத்தை அறிவித்து, “இப்போது Keyboard ஒரு போர் ஆயுதமாக மாறியுள்ளது” என்று குறிப்பிட்டார்.
இந்த புதிய திட்டத்தின் முக்கிய அம்சமாக Cyber and Electromagnetic Command எனும் புதிய கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை UK Strategic Command-இன் ஜெனரல் ஜேம்ஸ் ஹொக்கன்ஹல் தலைமையில் இயக்கவுள்ளனர்.
இந்த அமைப்பு பின்வரும் பணிகளை மேற்கொள்ளும்:
- எதிரி தகவல் தொடர்பு மற்றும் கட்டளை அமைப்புகளை பாழாக்குதல்
- மின்னியல் போர் நடவடிக்கைகள்
- செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் "Kill Web" எனப்படும் உயர்தர இலக்கிடும் வலையமைப்பை உருவாக்குதல் - இது செயற்கைக்கோள்கள், ட்ரோன்கள், F-35 ஜெட் விமானங்கள் மற்றும் போர்க்கால சென்சார்களை இணைக்கும்.
இது தவிர, தேசிய சைபர் படை (National Cyber Force) உடன் இணைந்து செயல்படும்.
முப்படை (ராணுவம், கடற்படை, விமானப்படை) சைபர் திறன்களை ஒருங்கிணைக்கும் இந்த திட்டம், வரும் திங்கள் அன்று வெளியிடப்படும் புதிய ராணுவ ஸ்ட்ராடஜிக் விமர்சனத்தின் முக்கிய அங்கமாகும்.
போர்களில் வெற்றிபெற விரும்பும் நாடுகள், எதிரிகளை விட வேகமாக புதுமை செய்யத் தெரிந்திருக்க வேண்டும் என ஹீலி கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK cyberwarfare initiative 2025, Cyber and Electromagnetic Command UK, UK AI kill web system, John Healey cyber defence UK, UK cyberattack statistics 2024, GCHQ MoD National Cyber Force, UK 1 billion pound cyber investment, UK Strategic Defence Review 2025, Outdated IT systems UK government, RAF Army Navy cyber integration