பிரித்தானியாவில் நகர மையத்தில் நடந்த கத்திக்குத்து: இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த சோகம்
பிரித்தானியாவின் பிரிஸ்டல் நகர மையத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கிடந்த நிலையில், அவர் தற்போது உயிரிழந்து இருப்பாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கத்திக்குத்து
பிரித்தானியாவின் பிரிஸ்டல் நகர மையத்தில் உள்ள castle பூங்கா பகுதியில் 30 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமார் 4.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த அவான் மற்றும் சோமர்செட் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Wiki
பாதிக்கப்பட்டவர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார், ஆனால் சிறப்பான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
தாக்குதல் விசாரணை கொலை விசாரணையாக மாறியுள்ள நிலையில், பொலிஸார் அப்பகுதியை சுற்றி வளைத்துள்ளனர்.
அடையாளம் காணும் பணி தீவிரம்
இந்நிலையில் பிரிஸ்டல் நகர மையத்தில் நடைபெற்ற தாக்குதல் குறித்து அவான் மற்றும் சோமர்செட் காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட தகவலில், கத்திகுத்து சம்பவத்தில் உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் முறையாக உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும் அவரது உறவினரை கண்டறிய அதிகாரிகள் இன்னும் பணியாற்றி வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
Geoffrey Bennett
அத்துடன் இந்த தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது தொடர்புடைய சிசிடிவி, டேஷ் கேம் அல்லது மொபைல் போன் காட்சிகளை வைத்திருப்பவர்கள் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.