விமானமா பறவையா.? ஈரானை ஏமாற்றிய அமெரிக்க B-2 ஸ்டெல்த் விமானம்!
B-2 ஸ்டெல்த் பாம்பர் விமானங்கள் மூலம் அமெரிக்கா ஈரானின் அணு தளங்களை தாக்கி உலகை அதிர வைத்துள்ளது.
ஈரான் ரேடார் கூட அந்த விமானங்களை கண்டுபிடிக்க முடியாமல், அவற்றை பறவைகள் என தவறாகக் கணித்துள்ளது.
இது B-2 பாம்பரின் ரகசிய தன்மை மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துகிறது.
18 மணி நேரம் நீடித்த இந்த ரகசிய நடவடிக்கையில் 7 B-2 பாம்பர்கள் ஈரானுக்குள் நுழைந்து, 30,000 பவுண்ட் எடையுள்ள 14 பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசியன. இது B-2 பாம்பரின் வரலாற்றிலேயே மிகப்பாரிய தாக்குதலாகும்.
B-2 எப்படி ரேடாரில் சிக்காமல் போனது?
- Flying wing வடிவமைப்ப (பறவையைப் போன்ற தோற்றம்)
- Radar-absorbing materials மற்றும் edge design
- குறைந்த சத்தத்துடன், மிக தாழ்வாக பறக்கும் திறன்
- இரவில் நடத்திய தாக்குதல்
ஈரானின் பாதுகாப்பு பலவீனம்
ஈரானின் விமான எதிர்ப்பு அமைப்புகள் பழையவை. அதுவும் இஸ்ரேல் நடத்திய முந்தைய தாக்குதலால் பல முக்கிய ரேடார் மற்றும் ஏவுகணை மையங்கள் அழிக்கப்பட்டிருந்தன. இதனால் அமெரிக்கா சுலபமாக தாக்கி வெற்றிபெற்றது.
முன்னறிவிப்பு இல்லாமல் நடந்த தாக்குதல்
ட்ரம்ப் "இரண்டு வாரம் எடுக்கும் முடிவு" என கூறி இருந்தாலும், சில நாள்களில்வே தாக்குதல் நடந்தது. பறந்த சில விமானங்கள் பசிபிக் பக்கம் திருப்பி பறவைகள் போன்று ஈரானை ஏமாற்றின.
இந்த ரகசிய தாக்குதல் வெற்றியாக இருந்தாலும், ஈரானின் அணு ஆயுத திட்டம் முடங்கியதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |