உலகின் மிக விலையுயர்ந்த திருமணம்; பெண் அணிந்திருந்த ஆடை மட்டுமே ரூ.4.1 கோடி - யாருடையது தெரியுமா?
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் அவரது கணவர் ஆனந்த் பிரமல் ஆகியோர் இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த திருமண நடத்தியவர்களில் முன்னிலையில் இருப்பவர்கள்.
இந்தியாவில் இவர்கள் என்றால், உலகளவில் பாத்தால் அது பிரித்தானிய அரச குடும்பத்தின் திருமணமாக தான் இருக்கும்.
இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானாவின் திருமணம் இந்த சாதனையை படைத்துள்ளது.
இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமாலின் திருமணத்திற்கு தோராயமாக ரூ. 400 கோடி செலவானது.
அதே சமயம் இளவரசி டயானா மற்றும் இளவரசர் சார்லஸின் ஆடம்பரமான அரச திருமணத்திற்கு 110 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இது ரூ. 914 கோடிக்கு சமமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் மிக விலையுயர்ந்த திருமணம்
இளவரசி டயானா மற்றும் இளவரசர் சார்லஸின் திருமணம் பிரிட்டிஷ் அரச குடும்ப வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாகும்.
குறித்த வரலாற்று சிறப்புமிக்க திருமணத்தை 28.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீட்டில் இருந்தப்படியே பார்த்தனர்.
இளவரசி டயானாவின் திருமண ஆடையும் எல்லா காலத்திலும் மிகவும் பிரபலமான ஒன்றாக கருதப்படுகிறது.
நிச்சயதார்த்தம் மற்றும் திருமணத்திற்காக 3000 க்கும் மேற்பட்ட பரிசுகளைப் மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானா பெற்றுள்ளனர்.
இதில் விலையுயர்ந்த வைர மற்றும் தங்க நகைகள், அரிய கடிகாரங்கள் மற்றும் ஆடம்பரமான பொருட்களும் உள்ளடக்கப்படும்.
குறித்த திருமண விழாவில் 250 இசைக்கலைஞர்களின் நேரடி இசை இடம்பெற்றது மற்றும் 1400 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வளவு பணம் செலவழித்து திருமணம் செய்யப்பட்டாலும் இறுதியில் இருவரும் விவாகர்த்து பெற்றுக்கொண்டு பிரிந்தார்கள்.
மேலும் இளவரசி டயானா ஒரு பயங்கரமான கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |