மாஸ்கோ குண்டுவெடிப்பு தொடர்பில் உக்ரைனில் தேடப்படும் நிறுவனர்
மாஸ்கோ குண்டுவெடிப்பில் கிரெம்ளின் ஆதரவு ஆர்மீனிய பிரிவின் நிறுவனர் உக்ரைனில் தேடப்படுகிறார்.
ஆர்மென் சார்கிஸ்யன்
வடமேற்கு மாஸ்கோவில் உள்ள ஒரு வீட்டு வளாகத்தில் நடந்த ஒரு வெடிகுண்டு தாக்குதல், ஆர்மீனியர்களைக் கொண்ட ரஷ்ய இராணுவப் பிரிவின் நிறுவனரை குறிவைத்து நடத்தப்பட்டதாக, திங்கட்கிழமை அதிகாலை மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அத்துடன் பெயர் குறிப்பிடாத சட்ட அமலாக்க வட்டாரங்களை மேற்கோள்கட்டியது. ஆரம்பத்தில் Arbat Battalion நிறுவனர் ஆர்மென் சார்கிஸ்யன் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், பெயரிடப்படாத ஆதாரங்களை The Kommersant வணிக நாளிதழ் மேற்கோள் காட்டி, சார்கிஸ்யன் ஆரம்பத்தில் வெடிப்பில் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது மெய்க்காப்பாளர்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் கூறியது. மேலும், மொத்தம் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தது.
உக்ரைனில் தேடப்படுவதாக
குண்டுவெடிப்பு ''உத்தரவிடப்பட்டு கவனமாக திட்டமிடப்பட்டது" என்று TASS செய்தி ஊடகம் தெரிவித்தது.
ஆனால், குண்டுவெடிப்புக்குப் பின்னால் யார் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்பதை குறிப்பிடவில்லை.
இந்த நிலையில்தான் நிறுவனர் ஆர்மென் சார்கிஸ்யன் குண்டுவெடிப்பு தொடர்பில் உக்ரைனில் தேடப்படுவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அவர் Arbat Battalionஐ வழிநடத்துவதோடு மட்டுமல்லாமல், கிழக்கு உக்ரைனின் ரஷ்ய ஆக்கிரமிப்பு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவராக சார்கிஸ்யனை ரஷ்ய ஊடகங்கள் விவரித்தன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |