உண்மை வெளியாக வேண்டும்... ஸ்டார்மரை நேரில் சந்தித்த இளைஞரின் குடும்பம்
கொலை செய்யப்பட்ட மாணவரை காவல்துறை நடத்திய விதம் குறித்து விளக்கம் கோரி, ஹென்றி நோவாக் குடும்பத்தினர் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்துள்ளனர்.
இனவெறிக் கருத்து
ஹென்றி நோவாக்கின் குடும்பத்தினர் இன்று பிற்பகல் டவுனிங் தெருவில் நடைபெற்ற பிரதமருடனான ஒரு தனிப்பட்ட சந்திப்பில் கலந்துகொண்டனர்.

சவுத்தாம்ப்டனில் ஒரு இரவு நேர கேளிக்கைக்குச் சென்றிருந்த ஹென்றி, ஐந்து கத்திக்குத்து காயங்களுடன் உதவிக்காக மன்றாடிய போதிலும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.
அவரைக் கொன்ற 23 வயதான விக்ரம் திக்வா, ஹென்றி இனவெறிக் கருத்துக்களைக் கூறியதாக ஒரு பொய்யைக் கூறியதால், காவல்துறையினர் ஹென்றியைக் கைது செய்தனர்.
இந்த நிலையில், பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த ஹென்றியின் குடும்பம் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. ஆனால், குடும்பத்தினரை சந்தித்ததன் பின்னர் பிரதமர் ஸ்டார்மர் தெரிவிக்கையில்,
ஹென்றி நோவாக்கின் குடும்பத்தினரைச் சந்தித்தது எனக்கு மிகுந்த பணிவையும் நெகிழ்ச்சியையும் அளித்தது. கற்பனை செய்ய முடியாத வேதனையின் மத்தியிலும் அவர்களின் கண்ணியத்தையும் வலிமையையும் காண முடிந்தது என்றார்.
கடினமான கேள்விகள்
இந்தக் கொடிய துயரச் சம்பவத்தையும் தாண்டிய ஒரு மரபு ஹென்றிக்கு உரித்தானது, அதை நிகழ்த்துவதில் நான் உறுதியாக இருக்கிறேன் எனவும் ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹென்றியின் கொலையை காவல்துறை கையாண்ட விதம் குறித்து பதிலளிக்கப்பட வேண்டிய கடினமான கேள்விகள் உள்ளன. காவல்துறை நடத்தைக்கான சுயாதீன அலுவலகம் விசாரணை நடத்தி வருகிறது.

இவ்வழக்கில் இழைக்கப்பட்ட அநீதிகளைச் சரிசெய்யத் தேவையான எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்வதில் நாங்கள் உறுதியுடன் இருப்போம் என்றார்.
மேலும், அந்த இளைஞனின் மரணத்தை நாடு முழுவதும் பிளவுகளைத் தூண்டுவதற்குப் பயன்படுத்த வேண்டாம் என்ற அவனது குடும்பத்தினரின் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்குமாறு பிரதமர் அரசியல்வாதிகளை வலியுறுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |