கழுத்தளவு தண்ணீரில் மைக் பிடித்து நேரலை செய்த பத்திரிக்கையாளர்.., வெள்ளத்தில் அடித்துச் சென்ற அதிர்ச்சி வீடியோ
பாகிஸ்தானில் கழுத்தளவு தண்ணீரில் மைக் பிடித்து நேரலை செய்த பத்திரிக்கையாளர் வெள்ளத்தில் அடித்துச் சென்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளத்தில் நேரலை செய்த பத்திரிக்கையாளர்
பாகிஸ்தானில் கடந்த ஜூன் 26-ம் திகதி முதல் கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாகாணங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இந்த வெள்ளத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் 40 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அதோடு, வெள்ளம் சூழ்ந்த இடங்களில் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதில், வெள்ளம் காரணமாக ராவல்பிண்டியில் உள்ள சாஹான் அணை உடைந்திருப்பதால் அங்குள்ள பகுதிகள் மூழ்கின.
இந்நிலையில், ராவல்பிண்டியில் பத்திரிகையாளர் ஒருவர் கழுத்தளவு வெள்ளத்தில் இறங்கி மைக்குடன் நேரலை செய்து கொண்டிருந்தார். அவர் வெள்ளத்தில் அடித்துச் சென்று உயிரிழந்துள்ளார்.
தற்போது, இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
A Pakistani reporter is swept away by strong currents during a live broadcast while covering the floods in neck-deep water.#Pakistan #Floods pic.twitter.com/0raCbYaoer
— Al Arabiya English (@AlArabiya_Eng) July 17, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |