அடுத்த வாரம் மரண தண்டனை: ஏமன் நாட்டில் திகிலில் கேரள செவிலியர்

Kerala Yemen
By Balamanuvelan Jul 09, 2025 06:26 AM GMT
Report

ஒரு நல்ல எதிர்காலத்துக்காக ஆசைப்பட்டு ஏமன் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற கேரளாவைச் சேர்ந்த செவிலியர் ஒருவருக்கு இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 16ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதால் அவரும் இந்தியாவிலிருக்கும் அவரது குடும்பத்தினரும் திகிலில் உறைந்திருக்கிறார்கள்.

ஏமன் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற கேரளப்பெண் 

அடுத்த வாரம் மரண தண்டனை: ஏமன் நாட்டில் திகிலில் கேரள செவிலியர் | Kerala Nimisha Priya To Face Death Sentence Iran

 இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா (34). கேரளாவில் செவிலியர் பணி செய்ய அவரது சான்றிதழ் தகுதி பெறாததால், வெளிநாடொன்றில் வேலை தேடும் முயற்சியில் இறங்க, 2008ஆம் ஆண்டு, ஏமன் நாட்டில் அவருக்கு வேலை கிடைத்தது.

2011ஆம் ஆண்டு நாடு திரும்பிய நிமிஷா, தன் தாயார் தனக்காக மணமகனான பார்த்துவைத்திருந்த டோமி தாமஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு, கணவருடன் ஏமனுக்குத் திரும்பினார். 2012ஆம் ஆண்டு தம்பதியருக்கு பெண் குழந்தை ஒன்று பிறக்க, செலவுகளை சமாளிப்பது கஷ்டமாயிற்று. ஆகவே, 2014ஆம் ஆண்டு மகளுடன் கேரளாவுக்குத் திரும்பிவிட்டார் தாமஸ். 

அடுத்த வாரம் மரண தண்டனை: ஏமன் நாட்டில் திகிலில் கேரள செவிலியர் | Kerala Nimisha Priya To Face Death Sentence Iran

ஆனால், 2017ஆம் ஆண்டு, தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக்கொண்டிருந்த தாமஸை ஒரு செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ’கேரள செவிலியரான நிமிஷா, தன் கணவரைக் கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டியதாக ஏமனில் கைது’ என்று அந்த செய்தி கூற, குழப்பமடைந்தார் தாமஸ். 

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல்

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல்

நடந்தது என்ன?

விடயம் என்னவென்றால், செவிலியராக பணி செய்ததில் கிடைத்த வருவாய் போதுமானதாக இல்லாததால், சொந்தமாக கிளினிக் துவங்க முடிவு செய்துள்ளார் நிமிஷா. ஆனால், ஏமன் நாட்டில் சொந்தமாக தொழில் துவங்கவேண்டுமானால், உள்ளூர் கூட்டாளர் ஒருவர் தேவை.

அப்போது, நிமிஷாவுக்கு உதவ முன்வந்துள்ளார் ஏமன் நட்டவரான மஹ்தி (Talal Abdo Madhi) என்பவர். மஹ்தியின் உதவியுடன் கிளினிக் துவங்கப்பட்டு எல்லாம் நல்லபடியாக சென்றுகொண்டிருந்திருக்கிறது.

ஆனால், மஹ்தி தனக்கு தொல்லை கொடுப்பதாக கணவரிடம் புகார் கூறியுள்ளார் நிமிஷா. தன்னை அவர் அடிப்பதாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவதாகவும் நிமிஷா புகார் கூற, தாமஸ் அது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் புகாரளித்துள்ளார்.

மஹ்தி, நிமிஷா தன் மனைவி என்பதற்கான போலியான ஆதாரங்களை உருவாக்கியதுடன், கிளினிக்கில் கிடைக்கும் பணத்தையும் எடுத்துக்கொள்ளத் துவங்கியுள்ளார்.

நிமிஷாவை அடித்துத் துன்புறுத்தியதுடன், அவரது பாஸ்போர்ட்டையும் மஹ்தி பறித்துவைத்துக்கொள்ள, எப்படியாவது தனது பாஸ்போர்ட்டை மீட்டு, தப்பி வந்துவிடவேண்டும் என திட்டமிட்ட நிமிஷா, மஹ்திக்கு மயக்க ஊசி போட்டிருக்கிறார்.

ஆனால், மயக்க மருந்தின் அளவு அதிகமாகவே, மஹ்தி உயிரிழந்துள்ளார். ஒரு தவறு அடுத்தடுத்த தவறுகளுக்கு வழி வகுக்க, நிமிஷா மஹ்தியின் உடலை துண்டு துண்டாக வெட்டி அந்த உடல் பாகங்களை தண்ணீர் தொட்டி ஒன்றிற்குள் வீசியிருக்கிறார். ஆனால், பொலிசில் சிக்கிக்கொண்டார். 

அடுத்த வாரம் மரண தண்டனை: ஏமன் நாட்டில் திகிலில் கேரள செவிலியர் | Kerala Nimisha Priya To Face Death Sentence Iran

நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்து நிமிஷா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட, 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி, அதை ஏமன் உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

ஏமன் நாட்டில், இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டம் பின்பற்றப்படுவதால், அச்சட்டப்படி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு இரத்தப்பணம் என்னும் ஒரு தொகையை செலுத்தினால், அவர்கள் குற்றவாளியை மன்னிப்பதாக அறிவிப்பார்கள்.

ஆக, நிமிஷா தங்களுக்கு 1.5 கோடி ரூபாய் செலுத்தவேண்டும் என மஹ்தியின் குடும்பத்தினர் கேட்க, நிமிஷாவின் தாயாகிய பிரேமா குமாரி (57), ஏமன் சென்று தன் மகள் சார்பில் மஹ்தி குடும்பத்திடம் மன்னிப்புக் கோர விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

அடுத்த வாரம் மரண தண்டனை: ஏமன் நாட்டில் திகிலில் கேரள செவிலியர் | Kerala Nimisha Priya To Face Death Sentence Iran

பிரச்சினை என்னவென்றால், நிமிஷா அடைக்கப்பட்டுள்ள சிறை இருக்கும் ஏமனின் தலைநகரான Sanaa, ஈரான் ஆதரவு ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அங்கு இந்திய தூதரகம் இல்லாததாலும், இரு நாடுகளுக்குமிடையில் தூதரக உறவுகள் இல்லாததாலும், உள்நாட்டுப் போர் பிரச்சினைகள் இருப்பதாலும், பாதுகாப்பு கருதி நிமிஷாவின் தாய் அங்கு செல்ல இந்திய அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்துவிட்டார்கள்.  

நிமிஷாவை விடுவிப்பதற்காக இந்திய அரசு ஏமன் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்திவரும் நிலையில், அடுத்த வாரம், அதாவது, ஜூலை மாதம் 16ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நிமிஷாவும் இந்தியாவிலிருக்கும் அவரது குடும்பத்தினரும் திகிலில் உறைந்திருக்கிறார்கள். 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US