இந்தியாவிற்கு அதிநவீன Su-57E ஸ்டெல்த் விமானத்தை வழங்கும் ரஷ்யா - விரைவில் உள்நாட்டில் தயாரிப்பு
இந்தியாவின் 'make in India' திட்டத்தின் கீழ் ரஷ்யாவின் அதிநவீன Su-57E ஸ்டெல்த் ஜெட் விமானங்கள் தயாரிக்கப்படவுள்ளன.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், வான்வெளி போர் திறன்களை மேம்படுத்தும் முயற்சியில் ரஷ்யா, தனது அதிநவீன Su-57E ஸ்டெல்த் யுத்த விமானத்தை இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி வட்டார தகவலின் படி, ரஷ்யாவின் ராஸ்டெக் நிறுவனம் (Rostec) வெளியிட்ட புதிய சலுகையில் முக்கிய அம்சமாக மேக் இன் இந்தியா கொள்கைக்கு முழுமையான ஆதரவும், தொழில்நுட்ப பரிமாற்றமும் அடங்கும்.
இந்திய தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயன் மாற்றங்கள்:
இந்தியாவின் Super-30 மேம்பாட்டு திட்டத்துடன் பொருந்தும் வகையில், Gallium Nitride (GaN)-based AESA radar மற்றும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட மிஷன் கம்ப்யூட்டர் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் பொறுத்தப்படவுள்ளன.
மேலும், Source code உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்பங்களுக்கான அணுகலுடன், HAL மற்றும் தனியார் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது.

12 புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்க பிரித்தானியா திட்டம்: வேலைவாய்ப்பும் பாதுகாப்பும்...
HAL நாசிக் யூனிட்டில் உற்பத்தி:
Su-30MKI போர் விமானங்களை ஏற்கனவே 220-க்கும் மேல் தயாரித்துள்ள நாசிக் உற்பத்தி மையம், Su-57E-க்கும் சிறந்த இடமாக கருதப்படுகிறது.
விரைவில் 5-ஆம் தலைமுறை வான்போர் திறன்
20 முதல் 30 Su-57E விமானங்கள் நேரடி வாங்குவதன் மூலம் விரைவாக இந்தியாவுக்கு வழங்கப்படும்.
அதையடுத்து, 3–4 ஆண்டுகளில் முழுமையான உள்ளூர் ஒருங்கிணைப்பு நடைமுறைப்படுத்தப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |