ரஷ்ய கப்பலில் இந்தியாவிற்கு வந்துகொண்டிருக்கும் 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்
இந்தியாவிற்கு ஏற்கெனவே 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ரஷ்யாவிலிருந்து வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சிக்கல்கள் உருவாகியுள்ளன. குறிப்பாக, அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலால் ஈரானில் நிலைமை மோசமடைந்துள்ளது.
இந்த சூழலில், இந்தியாவின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய ரஷ்யா முன்வந்துள்ளது.
இந்தியாவிற்கு சுமார் 9.5 மில்லியன் (95 லட்சம்) பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்கெனவே கப்பலில் ஏற்றப்பட்டு, இந்திய கடல் எல்லைக்கு அருகில் இருப்பதாகவும், இன்னும் சில வாரங்களில் அவை இந்தியாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி அறிக்கை கூறுகிறது.

இந்த நடவடிக்கை, மேற்கு ஆசியாவில் நீடிக்கும் மோதலால் ஏற்படும் விநியோக தடைகளை சமாளிக்க இந்தியாவிற்கு பெரும் உதவியாக இருக்கும்.
இந்தியா உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இருப்பதால் இந்த விநியோகம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் எரிசக்தி பாதுகாப்பிற்கும் முக்கிய பங்காற்றும்.
இந்த நிலைமையில், ரஷ்யா அமைதியான வெற்றியாளராக உருவெடுக்கிறது என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
மேற்கு நாடுகளின் தடைகள் இருந்தபோதிலும், ரஷ்யா தனது எண்ணெய் விநியோகத்தை இந்தியா போன்ற நாடுகளுக்கு மாற்றி, உலகளாவிய சந்தையில் தனது நிலையை வலுப்படுத்துகிறது.
இந்தியாவிற்கு விரைவில் வரும் இந்த எண்ணெய் நாட்டின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதோடு, விலை அதிகரிக்காமல் நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க உதவக்கூடும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia oil supply to India, India crude oil imports, West Asia oil disruption, Russia India energy trade, 9.5 million barrels crude oil, India energy security news #RussiaIndia #OilSupply #EnergySecurity #CrudeOil #WestAsiaConflict #IndiaEconomy #GlobalTrade