உலகை உலுக்கிய துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 3 மாதங்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட அதிசய மனிதன்
உலகையே உலுக்கிய துருக்கி-சிரியா நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் இருந்து 3 மாதங்களுக்கு பிறகு மனிதர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
உலகை உலுக்கிய துருக்கி-சிரியா நிலநடுக்கம்
கடந்த பிப்ரவரி 6 திகதி அதிகாலை 4:17 மணியளவில் மத்திய துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் 7.8 ரிக்டர் என்ற அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் தாக்கியது.
அத்துடன் சிறிது நேர இடைவெளியில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் மீண்டும் துருக்கி மற்றும் சிரியாவின் சில பகுதியில் பதிவானது. இதில் மொத்தமாக ஆயிரக்கணக்கான குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
EPA
மேலும் இடிபாடுகளில் சிக்கிய பொதுமக்களை மீட்பதற்காக பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீட்பு படையினர் துருக்கி மற்றும் சிரியாவிற்கு விரைந்தனர்.
இருப்பினும் துருக்கி மற்றும் சிரியாவை சீர்குலைத்த இந்த நிலநடுக்கத்தில் சிக்கி மொத்தமாக 59,259 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். துருக்கியில் மட்டும் 50,783 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், சிரியாவில் 8,476 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
3 மாதங்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர்
துருக்கி மற்றும் சிரியாவில் பொதுமக்களை மீட்கும் பணிகள் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும், இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
❗️ Rescuers pulled a man out from under the rubble three months after the earthquake in #Syria
— NEXTA (@nexta_tv) May 17, 2023
A severely emaciated but alive man was pulled out by rescuers. It is not reported how he survived. It is known that the rescued man was handed over to doctors for observation and… pic.twitter.com/ryPmwfRHqp
இந்நிலையில் சிரியாவில் நிலநடுக்க இடிபாடுகளில் இருந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு மனிதர் ஒருவரை மீட்பு படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
உடல் மிகவும் மெலிந்த நிலையில் உயிருடன் இருந்த அந்த மனிதரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்பு மருத்துவமனைக்கு அவசர பிரிவில் அனுமதித்தனர்.
நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி அந்த நபர் எவ்வாறு மூன்று மாதங்கள் வரை உயிர் பிழைத்தார் என்ற அறிக்கை இதுவரை வெளிவரவில்லை.
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நபர் தற்போது சிகிச்சை மற்றும் மறுவாழ்விற்காக மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
Reuters