பாலஸ்தீன ஒப்புதலிலிருந்து பின்வாங்கும் பிரான்ஸ், பிரித்தானியா
பாலஸ்தீன ஒப்புதலிலிருந்து பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா பின்வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் ஜூன் 17 முதல் 20 வரை நடக்கவிருக்கும் நியூயார்க் மாநாட்டில் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் திட்டமிட்டிருந்தன.
ஆனால் தற்போது, இருநாடுகளும் அந்த திட்டத்தை கைவிட்டுள்ளதாக இராஜதந்திரிகள் உறுதி செய்துள்ளனர்.
இது குறித்து பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், இது “நெறிமுறை கடமை மற்றும் அரசியல் தேவை” எனக் கூறியுள்ளார்.
மேலும், சவூதி அரேபியா இஸ்ரேலை அங்கீகரிக்க முன்வந்தால், அதற்கு பதிலளிக்கும் விதமாக இது நடைபெறலாம் எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது மாநாட்டில் நேரடி அங்கீகாரம் இல்லை, அதன் மாற்றாக அங்கீகாரத்துக்கான வழிமுறைகள் பற்றிய விவாதங்கள் நடைபெறும். இதில் கீழ்கண்ட முன் நிபந்தனைகள் வலியுறுத்தப்படுகின்றன:
- காசா பகுதியில் நிரந்தர போர்நிறுத்தம்
- இஸ்ரேலிய கைதிகள் விடுவிப்பு
- பாலஸ்தீன ஆட்சி அமைப்பின் மறுசீரமைப்பு
- காசாவின் மறுசீரமைப்பு மற்றும் ஹமாஸ் ஆட்சி முடிவுக்கு வருதல்
முன்னாள் மனித உரிமைகள் கண்காணிப்பு இயக்குநர் கென்னத் ரோத், இந்த நிபந்தனைகள் மூலம் பாலஸ்தீன ஒப்புதல் முடிவில்லா நிலையிலேயே தள்ளப்பட வாய்ப்பு உள்ளது என எச்சரித்துள்ளார்.
இப்போது 147 நாடுகள் பாலஸ்தீனை அங்கீகரித்துள்ளன. ஆனால் ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக பிரித்தானியா மற்றும் பிரான்ஸ், இதற்கு அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக பின்வாங்கியுள்ளன.
இஸ்ரேல், இதற்கான பதிலாக மேற்குக் கரை பகுதியில் 22 புதிய குடியேற்றங்கள் அமைப்பதாக அறிவித்துள்ளது. இது ஒரு தனிநாடு உருவாவதைத் தடுக்கும் முறையான நடவடிக்கையாக இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK Palestine recognition news, France drops Palestine plan, New York peace conference 2025, Gaza ceasefire conditions, Palestinian statehood recognition 2025, Israel settlement expansion news, Macron Palestine policy