எல் நினோவிற்கு தயாராக இருங்கள் - ஐநா எச்சரிக்கை
உலகம் மீண்டும் எல் நினோவிற்கு (El Niño) தயாராக இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் (UN)அமைப்பு எச்சரித்துள்ளது.
உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization) வெளியிட்ட அறிக்கையில், இந்த சக்திவாய்ந்த இயற்கை வானிலை நிகழ்வு செப்டம்பர் மாதத்திற்குள் உருவாக 80 சதவீத சத்தியமும், நவம்பர் மாதத்திற்கு முன் உருவாக 90 சதவீத சத்த்யமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல் நினோ என்பது உலக வெப்பநிலையை உயர்த்தி, மழை மற்றும் வறட்சியை தீவிரப்படுத்தும்.

2023-2024 காலகட்டத்தில் ஏற்பட்ட எல் நினோ, கடந்த நூற்றாண்டின் மிக வலுவான நிகழ்வுகளில் ஒன்றாக இருந்தது. அது 2024-ஆம் ஆண்டை உலகின் மிக அதிக வெப்பமான ஆண்டாக மாற்றியது.
உலக வானிலை அமைப்பின் அறிக்கையில், அடுத்த மூன்று மாதங்களில் உலகின் பெரும்பாலான பகுதிகளில் அசாதாரண வெப்பநிலை இருக்கும் எனவும், அதிக மழை மற்றும் வறட்சி ஏற்படும் வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது.
எல் நினோ பொதுவாக தென் அமெரிக்கா, அமெரிக்காவின் தெற்கு பகுதிகள், ஆப்பிரிக்காவின் Horn of Africa, மத்திய ஆசியா போன்ற இடங்களில் அதிக மழையை ஏற்படுத்தும்.
அதேசமயம், மத்திய அமெரிக்கா, கரீபியன், அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, தெற்காசியா போன்ற பகுதிகளில் வறட்சி ஏற்படும்.
ஐநாவின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், “எல் நினோ உலக வெப்பமயமாதலுக்கு மேலும் தீவிரம் சேர்க்கும். இது எல்லைகளைத் தாண்டி வேகமாக தாக்கும்” என எச்சரித்துள்ளார்.
இது உணவு உற்பத்தி மற்றும் விவசாயத்திற்கு பெரிய சவாலாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2027-ஆம் ஆண்டுக்குள் உலகின் மிக அதிக வெப்பமான ஆண்டு மீண்டும் வரலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |