1 கோடி ட்ரோன்களை தயாரிக்கும் வல்லமை - உக்ரைனின் பாதுகாப்பு துறையில் புரட்சி
உக்ரைன் தற்போது உலகின் முன்னணி ட்ரோன் உற்பத்தியாளர்களில் ஒன்றாக திகழ்கிறது.
ஆண்டுக்கு 1 கோடி ட்ரோன்கள் தயாரிக்கும் திறனை தற்போது பெற்றுள்ளது என துணை பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சாண்டர் கொசென்கோ (Oleksandr Kozenko) கூறியுள்ளார்.
இந்த வளர்ச்சி, உக்ரைனின் பாதுகாப்பு துறையில் ஏற்பட்ட புரட்சியை உணர்த்துகிறது.
ட்ரோன்கள் நவீன போரின் தவிர்க்கமுடியாத புதிய ஆயுதமாக மாறியுள்ளது.
போர்க்களத்தில் ட்ரோன்களின் பங்கு
சிங்கப்பூரில் நடைபெற்ற Shangri-La Dialogue பாதுகாப்பு மாநாட்டில் பேசிய கொசென்கோ, “நாம் விண்வெளி, நிலம், கடல் என அனைத்து தளங்களிலும் ட்ரோன்களை மேம்படுத்தியுள்ளோம். தற்போது போர்க்களத்தில் நடைபெறும் தாக்குதல்களில் 80 சதவீதம் ட்ரோன்கள் வழியாக நடைபெறுகின்றன." என்று கூறியுள்ளார்.
குறைந்த செலவில், மேம்பட்ட ட்ரோன்கள்
உக்ரைனில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள், குறைந்த செலவில், போரில் சோதிக்கப்பட்ட மற்றும் பல்வேறு சூழ்நிலைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டவை. இந்த ட்ரோன்கள் காற்று, நிலம் மற்றும் கடலில் செயல்பட வல்லவை.
உலக நாடுகளுக்கு அழைப்பு
உலக நாடுகள் உக்ரைனின் ட்ரோன் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒற்றுமையாகச் சேர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். கூட்டு உற்பத்தி, நிதியுதவி மற்றும் தொழில்நுட்பம் பகிர்வும் தேவையாக உள்ளன.
Spiderweb தாக்குதல்
சமீபத்தில், உக்ரைனின் SBU சிறப்பு படைகள் Operation Spiderweb எனும் ரகசிய நடவடிக்கையின் கீழ், ரஷ்யாவின் ஐந்து விமானத் தளங்களை ட்ரோன்களால் தாக்கியது. இதில் 34 சதவீத ரஷ்ய க்ரூஸ் மிசைல் விமானங்கள் அழிக்கப்பட்டன என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ukraine drone production 2025, Ukraine Spiderweb drone attack, Ukraine vs Russia drone war, Ukrainian combat drones, Ukraine drone industry news, Drone warfare Ukraine Russia, Ukraine drone attack Russia airfields, Ukraine defence technology drones, Cost-effective military drones Ukraine, Ukraine SBU drone operation