மரியுபோலில் இருந்து 125 கி.மீ. நடந்தே சென்று உயிர் தப்பிய குடும்பம்! நடுவில் சந்தித்த துயரங்கள்..

Vladimir Putin Russo-Ukrainian War
By Ragavan Apr 23, 2022 10:41 AM GMT
Report

ரஷ்யர்களின் தாக்குதலில் இருந்து குடும்பத்தை காப்பாற்ற கணவனும் மனைவியும் தங்கள் 4 குழந்தைகளுடன் மரியுபோல் நகரத்தில் இருந்து 125 கி.மீ. நடந்தே வேறு நகரத்துக்கு சென்றுள்ளனர்.

உக்ரைனின் மரியுபோல் நகரத்தை சொந்த ஊராக கொண்டவர் எவ்ஜென் டிஷ்செங்கோ (Yevgen Tishchenko). 37 வயதாக்கும் தோஷில்நுட்ப வல்லுனரான அவருக்கு 40 வயதில் டெட்டியானா கோமிசரோவா (Tetiana Komisarova) எனும் மனைவி உள்ளார்.

இருவருக்கும், யூலியா (6), ஒலெக்சாண்டர் (8), அன்னா (10) மற்றும் இவான் (12) என நான்கு குழந்தைகள் உள்ளனர்.

விளாடிமிர் புடினின் ரஷ்ய படையினர் பெருநாசம் செய்த பல உக்ரைனிய நகரங்களில் மிக முக்கியமான நகரம் மரியுபோல். உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல், ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதிலிருந்து தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.

மரியுபோலில் இருந்து 125 கி.மீ. நடந்தே சென்று உயிர் தப்பிய குடும்பம்! நடுவில் சந்தித்த துயரங்கள்.. | Ukraine Family Escape From Mariupol 125Km Foot

அந்நகரத்தில், வீடுகள் மருத்துவமனைகள் என அப்பாவி மக்கள் தஞ்சம் புகுந்திருக்கும் கட்டுமானங்கள் கூட ரஷ்யாவின் ஷெல் தாக்குதலால் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. அந்நகரத்தில் 10,000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இத்தனை சிக்கல்களுக்கும் இடையே, எவ்ஜென் டிஷ்செங்கோவின் குடும்பம் மரியுபோல் நகரத்திலிருந்து தப்பி 125 கிலோமீற்றர் நடந்து வேறு நகரத்துக்கு பாதுகாப்பகங் வந்து செர்ட்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) உக்ரேனிய நகரமான Zaporizhzhia-விற்கு வந்து சேர்ந்த அந்த அதிர்ஷ்டசாலி குடும்பம் கடந்த சில வாரங்களில் தாங்கள் அனுபவித்த துன்பங்களை, கடந்து வந்த பாதையைப் பற்றி ஊடகங்களில் விவரித்துள்ளார்.

கிட்டத்தட்ட 2 மாதங்களாக, மரியுபோலில் தங்கள் வீட்டின் நிலத்தடி தளத்தில் பதுங்கியிருந்த இந்தக் குடும்பத்தினர், சொந்த ஊரான மரியுபோல் மொத்தமாக அழிக்கப்பட்டு வந்த நிலையில், யெவ்ஜென் மற்றும் டெட்டியானா இருவரும் தங்கள் நான்கு குழந்தைகளுடன் தப்பிக்க ஒரே ஒரு வழி தான் இருக்கிறது, அது அங்கிருந்து நடந்தே சென்று எப்படியாவது தங்கள் குடும்பத்தினர் இருக்கும் வேறு நகரத்திற்கு செல்வது தான் என முடிவு செய்கின்றனர்.

மரியுபோல் நகரத்தில் இருந்து மக்கள் வெளியேற்றம்: உக்ரைன் துணைப் பிரதமர் அதிரடி! 

நிலத்தடி வாழ்க்கை

பதுங்கி இருந்த காலகட்டத்தில், தங்கள் குழந்தைகள் நால்வரையும் அடுத்து எதிர்கொள்ளும் ஆபத்தான பயணத்திற்கு தயார்படுத்தியுள்ளனர். குழந்தைகள் இதை ஒரு சாகச பயணமாக நினைக்கும் அளவிற்கு அவர்களை தயார் செய்துள்ளனர்.

மரியுபோலில் இருந்து 125 கி.மீ. நடந்தே சென்று உயிர் தப்பிய குடும்பம்! நடுவில் சந்தித்த துயரங்கள்.. | Ukraine Family Escape From Mariupol 125Km Foot

2 மாதங்கள் கான்க்ரீட் தரையில் தூங்கி, வெளிச்சம் இல்லாமல், தண்ணீர், உணவு சரியாக கிடைக்காமல், தூசி நிறைந்த காற்றை சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்டனர். அப்படி ஒரு பசியில் வெளியே விழும் வெடிகுண்டு சத்தங்கள் அவர்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக தெரியவில்லை.

மரியுபோலை விட்டு..

இறுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, தங்கள் வீட்டை விட்டு கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று முடிவு செய்து, பதட்டத்துடன் அவர்கள் குழந்தைகளை தங்கள் கட்டிடத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர். பிப்ரவரி 24 அன்று ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்றாக வெளியேறுவது அதுவே முதல் முறையாக இருந்தது.

வெளியே அவர்களைச் சுற்றி முற்றிலும் அழிவின் பயங்கரமான காட்சியைக் கண்டார்கள். குழந்தைகள் எல்லாவற்றையும் பார்த்துகொண்டு அமைதியாக நடந்தார்கள்.

குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அவர்களால் தெரிந்துகொள்ளமுடியவில்லை. பெரியவர்கள் தங்களுக்கு என்ன காத்திருக்கிறார்கள் என்பதை ஏற்கனவே உணர்ந்திருக்கிறார்கள்.

ஒரு துருப்பிடித்த மூன்று சக்கர தள்ளுவண்டியில், தேவையான பொருட்களால் நிறைந்த பைகளை ஏற்றிக்கொண்டு நடக்க தொடங்கியுள்ளனர்.

இளைய மகளை முச்சக்கரவண்டியில் பைகளுடன் ஏற்றிக்கொண்டு நடந்தனர். பிறகு மற்ற குழந்தைகளில் ஒருவரை மாற்றி மாற்றி கூடுதலாக வண்டியில் ஏற்றிக்கொண்டு நடந்துள்ளனர்.

மரியுபோலில் இருந்து 125 கி.மீ. நடந்தே சென்று உயிர் தப்பிய குடும்பம்! நடுவில் சந்தித்த துயரங்கள்.. | Ukraine Family Escape From Mariupol 125Km Foot

ரஷ்ய சுங்கச்சாவடிகள்:

ஐந்து நாட்கள் மற்றும் நான்கு இரவு பயணத்தில், குடும்பம் பல ரஷ்ய சோதனைச் சாவடிகளைக் கடந்தனர்.

"அவர்கள் எங்களை எதிரிகளாகக் கருதவில்லை, அவர்கள் உதவ முயன்றனர்" என்று எவ்ஜென் கூறினார். "ஆனால் ஒவ்வொரு முறையும் 'நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? மரியுபோலில் இருந்தா? ஆனால் நீங்கள் ஏன் இந்த திசையில் செல்கிறீர்கள், ஏன் நீங்கள் ரஷ்யாவிற்கு செல்லவில்லை?" என்று எங்களிடம் கேட்டனர்" என்றார்.

இரவில், குடும்பத்தினர் உள்ளூர் மக்களின் வீடுகளில் தூங்கினர், அவர்கள் வழியில் தங்கள் கதவுகளைத் திறந்து நன்றாக உணவளித்தனர். பகலில், அவர்கள் எல்லா முரண்பாடுகளையும் மீறி நகர்ந்தனர்.

மரியுபோலில் இருந்து 125 கி.மீ. நடந்தே சென்று உயிர் தப்பிய குடும்பம்! நடுவில் சந்தித்த துயரங்கள்.. | Ukraine Family Escape From Mariupol 125Km Foot

125 கிலோமீற்றர்

இறுதியில் அவர்கள் அதிர்ஷ்டம் அடைந்தனர் மற்றும் ஜபோரிஜியாவிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரஷ்ய ஆக்கிரமிக்கப்பட்ட நகரமான போலோஹி வழியாக டிமிட்ரோ ஷிர்னிகோவை சென்றடடைந்தனர்.

125 கிலோமீட்டர்கள் நடந்தே சென்ற பிறகு, டெட்டியானா, யெவ்ஜென் மற்றும் அவர்களது குழந்தைகளும் பயணத்தை முடித்தனர்.

ஷிர்னிகோவ் அவர்கள் ரஷ்ய கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வெளிவந்து உக்ரேனிய வீரர்களைப் பார்த்தபோது அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை நினைவு கூர்ந்தார்.

"எங்களுக்கு ஒரே ஒரு குறிக்கோள் இருந்தது: எங்கள் குழந்தைகள் உக்ரைனில் வாழ வேண்டும். அவர்கள் உக்ரேனியர்கள், அவர்கள் வேறு நாட்டில் வாழ முடியும் என்று நாங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது," என்று டெட்டியானா கூறினார்.

மரியுபோலில் இருந்து 125 கி.மீ. நடந்தே சென்று உயிர் தப்பிய குடும்பம்! நடுவில் சந்தித்த துயரங்கள்.. | Ukraine Family Escape From Mariupol 125Km Foot

உக்ரைனுக்கு அருகிலுள்ள மற்ற நாடுகளையும் கைப்பற்ற ரஷ்யா திட்டம்! ஜெலன்ஸ்கி எச்சரிக்கை 

குடும்பத்தின் அடுத்த திட்டம்

வெள்ளியன்று, குடும்பத்தினர் தங்களையும் தங்கள் அற்ப உடைமைகளையும் மேற்கு நகரமான லிவிவ் நோக்கிச் செல்லும் நெரிசலான ரயிலில் அடைத்தனர்.

பின்னர் அவர்கள் மேற்கு உக்ரைனில் உள்ள மற்றொரு பெரிய நகரமான இவானோ-ஃபிராங்கிவ்ஸ்க் நகருக்குச் சென்று, இயல்பு வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

"எனக்கு வேலை தேட வேண்டும். என் மனைவி குழந்தைகளை கவனித்துக்கொள்வாள், அவர்களுக்கு ஒரு பள்ளியைக் கண்டுபிடிக்க முயற்சிப்பாள்" என்று யெவ்ஜென் கூறினார்.

"நாங்கள் அனுபவித்ததை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. நாங்கள் மறக்கவும் கூடாது" என்கிறார் யெவ்ஜென்.

GalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US