திவிநெகும தொடர்பான விளக்கம் சபாநாயகருக்கே அனுப்பி வைக்கப்பட வேண்டும்: சமால் ராஜபக்ச
திவிநெகும சட்டத்தை அமுல்படுத்துவதற்கு வட மாகாண ஆளுனரின் இணக்கம் போதுமானதா என்பது குறித்து உயர் நீதிமன்றிடம், மேன்முறையீட்டு நீதிமன்றம் விளக்கம் கோரியிருந்தது.
இதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் திவநெகுமு சட்டம் தொடர்பில் இன்று நாடாளுமன்ற செயலாளருக்கு விளக்க அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
எனினும், இந்த விளக்க அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், திவிநெகும சட்டம் தொடர்பிலான விளக்கம் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் கருதப்பட முடியாது என சபாநாயகர் சமால் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு இடையில் இடம்பெற்று வரும் அதிகார முரண்பாட்டின் மற்றுமொரு பரிமாணமாக இந்த சம்பவத்தை அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.