.மாத்தளை மாவட்டத்தில் நாவுல பிரதேசத்திலுள்ள மூன்று கிராமங்களில் சிவப்பு, மஞ்சள், மீன் மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
நாவுல பிரதேசத்தில் வீ ஹேனட்ட கிராமத்தில் மஞ்சள் மழையும், பன்னம்பிட்டிய கிராமத்தில் சிவப்பு மழையும், திகுனல கிராமத்தில் மீன் மழையும் பெய்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.20 மணிமுதல் 10.45 மணிவரையே இவ்வாறு மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இவ்வருடத்தில் இலங்கையில் என்றுமில்லாதவாறு சிவப்பு, மஞ்சள் மழை மற்றும் மீன் மழையும் பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.