மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக மாவட்ட ஆட்சியர் அன்புச்செழியன் தலைமையிலான குழு கடந்தமாதம் வேதா இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக இன்றும் அன்புச் செழியன் தலைமையிலான அதிகாரிகள் வேதா இல்லத்தில் ஆய்வு செய்தனர்.
அரசின் இந்த முயற்சிக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, மற்றும் தீபக் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.