செய்தி
யாழில் கைதான 45 பேரும் பூசா முகாமில்!- கைது செய்யப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர்: பொலிஸ் பேச்சாளர்
[ வியாழக்கிழமை, 27 டிசெம்பர் 2012, 03:18.16 AM GMT ]

யாழ்ப்பாணத்தில் கடந்த பல வாரங்களில் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட 45 பேர் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும், நீண்டகாலமாக சேகரித்து வந்த புலனாய்வுத் தகவல்களின்படியே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இராணுவத்திடம் சரணடையாமல் மறைந்து வாழ்ந்த இவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும், அதன் பின்னர் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், புலனாய்வுப் பிரிவினரின் தகவல்களின் படி இன்னும் கைது செய்யப்பட வேண்டியவர்கள் வடபகுதியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ள 45 பேர் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் தம்மிடம் முறைப்பாடு செய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் மூன்று பெண்களும் 19 வயதான பாடசாலை மாணவர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் அனைவரும் போருக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்றும், போர் முடிந்த பின்னர் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணத்தில் 2010ம்- ஆண்டளவில் மீளக்குடியேறியவர்கள் என்றும் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 22-05-2013, 05:34.40 PM ]
மட்டக்களப்பு புல்லுமலை, உறுகாமக் கிராமங்களுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக வருகை தந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையிலான குழுவினரிடம் துண்டுப் பிரசுரம் கையளித்த இருவரை இலங்கை புலனாய்வுத்துறையினர் கைது செய்துள்ளனர்.
[ Wednesday, 22-05-2013, 04:14.38 PM ]
பிரான்ஸின் கடற்படைக் கப்பல் 'ஜாக்குஸ் கார்டியர்"  இன்று புதன்கிழமை பிரான்ஸ் நாட்டுக்  கடற்படையினர் 53 பேருடன் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
[ Wednesday, 22-05-2013, 03:54.36 PM ]

போர்க் குற்றவாளியும் தற்போதைய வடமாகாண ஆளுநருமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, இணைய ஊடகவியலாளர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று மிகக் கேவலமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி திட்டியுள்ளமையானது குடாநாட்டு ஊடகவியலாளர்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

[ Wednesday, 22-05-2013, 03:39.55 PM ]

அவுஸ்திலேரலியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக திகழ்வதாகத் தெரிவித்து  கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த  இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

[ Wednesday, 22-05-2013, 03:23.32 PM ]

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

[ Wednesday, 22-05-2013 17:04:07 GMT ]
ஈராக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கும் குறைவாக உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே மத நம்பிக்கையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
[ Wednesday, 22-05-2013 11:38:24 GMT ]
சினிமா, கிரிக்கெட்டிற்கு அடுத்தபடியாக அரசியல்வாதியாகவும் வலம் வரவிருக்கிறார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா.
[ Wednesday, 22-05-2013 14:42:16 GMT ]
ராஜஸ்தான் றொயல்ஸ் அணிக்கெதிரான ஆறாவது ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
[ Wednesday, 22-05-2013 07:38:03 GMT ]
கடல் நீரில் இருந்து யுரேனியம் தயாரிக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
[ Wednesday, 22-05-2013 11:53:12 GMT ]
கமல்ஹசான் தயாரித்து இயக்கி நாயகனாக நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.