ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என பிசிசிஐக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது அந்தந்த நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும், இதேபோல் ஐபிஎல் போட்டிகளின் போதும் இசைக்கப்பட வேண்டும்.
சினிமா தியேட்டர்கள், கால்பந்து லீக் மற்றும் புரோ கபடி போட்டிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.
தொடக்க விழா நடைபெறாததால் இது சரியான தருணமே என தெரிவித்துள்ளார்.