கர்நாடகாவில் தாக்கப்பட்ட தமிழருக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் தமிழகத்தில் உள்ள கன்னட மக்களை தாக்குவோம் என தமிழர் முன்னேற்றப்படைத் தலைவர் வீரலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவிரி நீர் திறக்கப்பட்டதில் இருந்தே கர்நாடகாவில் வன்முறைகள் மற்றும் கலவரங்கள் நடைபெற்று வருகின்றன.
இதைத் தொடர்ந்து காவிரி விவகாரம் தொடர்பாக கன்னட திரையுலகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கன்னட திரையுலகத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதை பெங்களூரில் வசித்து வரும் தமிழகத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞன் முகநூலில் பதிவிட்டதாக கூறி, கன்னட இளைஞர்கள் சிலர் தாக்கியுள்ளதாக கூறி வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இதற்காக தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்பிரச்சனைக்கு நடிகர் சங்கம் போராட வேண்டும் என தமிழர் முன்னேற்றப்படை சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் வீரலட்சுமி கூறுகையில், கர்நாடகாவில் தாக்கப்பட்ட தமிழருக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் தமிழகத்தில் உள்ள கன்னடர்களையும், கன்னட நடிகர்களையும் தாக்குவோம் என கூறியுள்ளார்.